districts

img

சாலை விபத்தை தடுக்க வேகத்தடை அமைத்திடுக

தருமபுரி, ஜூன் 16- தருமபுரி நகரில் சாலை  விபத்தை தடுப்பதற்கு வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர் தருமபுரி நகரத்தி லிருந்து எஸ்விரோடு வழி யாக அன்னசாகரம், வெங் கட்டம்பட்டி, முக்கநாயக் கன்பட்டி, எட்டிமரத்துப் பட்டி, நூலள்ளி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த கிராம மக்கள்  இரு சக்கர வாகனம்,  கார் உள்ளிட்ட வாகனங்களிலும் தினந்தோறும் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலை விநாயகர் கோவில்  தெருவில் 3 தனியார் பள்ளிகள், வட்டாட் சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய  அலுவ லகம், பத்திரப்பதிவு அலுவலகம், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், திருமண  மண்டபங்கள் ஆகியவை உள்ளன.  இப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால், அதிக நெரிசல் ஏற்படுகிறது. இத னால், சாலை விநாயகர் கோவில் தெரு,  அன்னசாகரம் பிரிவு சாலையில் தினந் தோறும் விபத்துக்கள் ஏற்படுகிறது.  எனவே,  இப்பகுதியில் வேகத்தடை அமைத்தால் விபத்துக்கள் குறையும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.