districts

பட்டா நிலம் அளந்து தர வலியுறுத்தி செப். 30ல் அவிநாசி, பல்லடத்தில் சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், செப்.25 - செப்.30 ஆம் தேதி விவசாய இயக்கத்தின்  மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் மாணிக்காபுரம் மற்றும் அவிநாசி தாலுகா ஈட்டிவீரம்பாளையம் பகுதி மக்களுக்கு வழங் கப்பட்ட பட்டாவிற்கு நிலம் அளந்து தரக் கோரி வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணிக்காபுரம் ஊராட்சிமன்ற அலுவலக  வளாகத்தில் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலந்து கொண்ட அந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கூறுகையில், மாணிக்காபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா இடம் இன்ன மும் மேய்ச்சல் நிலமாகவே உள்ளது. இதை  நத்தம் புறம்போக்காக மாற்ற வேண்டும்.  கருப்பண்ணசாமி நகர் பகுதியில் குடியிருந்து  வரும் 37 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா  வழங்க வேண்டுமென  வட்டாட்சியர், மாவட்ட  ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பட்டா வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சுதந்திர தினத்தன்று நடை பெற்ற கிராமசபைக் கூட்டத்தை வட்டாட்சியர்  வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என  கோரிக்கை வைத்தனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  வட்டாட்சியர் வரவில்லை. மேலும், கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர் வாக அலுவலர் அங்கு காத்திருந்தவர்களை கண்டும் காணாமல் கிளம்ப முயன்றார்.  எனவே ஆத்திரமடைந்த மக்கள் உடனடியாக  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் நேரில் வந்து  பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அனைத்து கோரிக்கைக ளையும் இரு தினங்களுக்குள் நிறைவேற்றித்  தருகிறோம் என்று உத்தரவாதம் அளித் தனர். இதன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஒரு மாதத் திற்கு மேலாகியும் இன்னும் பட்டா வழங்கப்ப டவில்லை. அதேபோல் ஈட்டிவீரம்பாளையம் பஞ்சா யத்திற்கு உட்பட்ட சிலருக்கு வீட்டுமனைப் பட்டா 1994 ஆம் ஆண்டு அரசு புறம் போக்கு இடத்தில் நிலம் வழங்கப்பட்டுள் ளது. ஆனால், நிலம் அளந்து கொடுக்கப்ப டவில்லை. அப்போதைய பஞ்சாயத்து நிர்வா கத்தில் போதுமான நிதி இல்லாததால், அடிப் படை வசதிகள் ஏற்படுத்த முடியவில்லை, பிற் காலத்தில் ஏற்படுத்தி தருவதாக பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்ததால், அங்கு குடியேற முடியாமல் வந்துவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஜூன்  28ஆம் தேதி இப்பகுதியில் உள்ள 1.15  ஹெக்டேர் நிலத்தில் அயலகத் தமிழர் நலன்  மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் பெரு மாநல்லூர் கிராமத்தில் வசிக்கும் இலங்கை தமிழருக்கு வீடுகட்ட அனுமதிக்கும் வகை யில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு  முன்னணி தலைமையில் நிலத்தில் குடியேற முயற்சித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் இன்னும் நான்கு நாட்களில் மாவட்ட ஆட்சியரிடம் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இந்நிலையில் ஒரு மாதம் ஆகியும் நிலம் அளந்து தர வில்லை.  எனவே மேற்கண்ட இரு இடங்களிலும் உடனடியாக நிலம் அளந்து கொடுக்க கோரி  மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு செப்.30ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்ப டுகிறது. மாணிக்காபுரம் பகுதி மக்களுக்காக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது. அதேபோல ஈட்டிவீரம்பாளையம் பகுதி மக்க ளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், ச.நந்தகோபால், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.காளியப்பன், அ.ஈஸ்வரமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டச் செயலாளர் சி.கே.கன கராஜ் தலைமையில் அவிநாசி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட் டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது.