தருமபுரி, ஏப்.22- தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வரு கிறது. இதன் அருகே ரூ.69 லட்சம் மதீப்பீட்டில் நவீன பேருந்து நிழற்கூடம் கட்டும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில், திமுக ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, ஆறுமுகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.