ஆ.ராசா எம்.பி., உறுதி உதகை, ஜூலை 11- உச்சநீதிமன்றம் கூறியுள்ள “பப் பர் சோன்”பிரச்சனை” குறித்து முதல்வரிடம் தெரிவித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உறுதியளித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலா ளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப் பினருமான ஆ.ராசா தலைமையில் தோழமை கட்சி நிர்வாகிகள் கூட் டம் ஞாயிறன்று உதகையில் நடை பெற்றது. திமுக மாவட்ட செயலா ளர் பா.மு.முபாரக் அனைவரை யும் வரவேற்றார். தமிழக வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்தி ரன் முன்னிலை வகித்தார். இக்கூட் டத்தில், இந்தியா முழுவதும் உள்ள வன பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சற்றுவட்டார பகுதியினை “பப்பர் சோன்” என அறிவிக்க உத் தேசித்து கருத்தினை உச்சநீதிமன் றம் வெளியிட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக் கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, இப்பிரச்சனை குறித்து தெளிவான விவரங்களை தெரி வித்து, கூடலூர் தொகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் எனக்கூறி வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆ.ராசா எம்.பி., பேசுகையில், பப்பர் சோன் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள முழு விவரங்களையும் படித்து பார்த்து, வனத்துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்து பேசியும், மற்ற மாநிலங்களில் இப் பிரச்னைக்காக எடுக்கப்படும் நடவ டிக்கைகள் குறித்து அறிந்தும், இதனை தமிழக முதல்வரிடம் தெரி வித்து உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உயரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். மேலும், இக்கூட்டத்தில் கூடலூர் பகுதியில் தீர்க்க வேண் டிய முக்கிய பிரச்னைகளான பிரிவு 17 நிலப்பிரச்னை, மின்சாரம் மற்றும் டேன் டீ தொழிலார்களுக்கான பிரச்சனைகள் குறித்தும் ஆலோ சிக்கப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் திமுக மாவட்ட துணைச்செயலா ளர் ரவிகுமார், தலைமை செயற் குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் அம்சா, ரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் என்.வாசு, மாவட்டக்குழு உறுப்பினர் மணி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முகமது கனி, இந் திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் அனீபா, விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட செயலாளர் க.சகாதேவன், ஒன்றிய செயலா ளர் லியாகத் அலி, வியாபாரிகள் சங்க நிர்வாகி கந்தையா, மக்கள் வாழ்வுரிமை கட்சி நிர்வாகி வர்கீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.