districts

விஷமிகள் வதந்தி: தண்ணீர் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

தருமபுரி, செப்.21- பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, தண்ணீர் மாதி ரியை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்து சென்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி  கிராமம் பனைக்குளத்தில் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 126 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள கழிப்பறைகளுக்கு தண் ணீர் வழங்க கழிப்பறை வளாகத்தின் மேல் இரண்டு சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இதில் தண்ணீர் நிரம்பி உள்ளதா என ஆசிரியர் கணே சன் பார்த்த போது அதில் துர்நாற்றம் வீசி யுள்ளது. இதையடுத்து ஆசிரியர் கணேசன், தலைமை ஆசிரியர் பாபு விடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கட்டடத்தின் மீது உள்ள தண்ணீர்த் தொட்டியை ஆய்வு செய்த தில் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந் துள்ளது போல் துர்நாற்றம் வீசியுள் ளது.  மேலும்,  தண்ணீர் கலங்கலாக  இருந் தது. இது குறித்து தலைமை ஆசிரியர் பாபு கிராம நிர்வாக அலுவலர் கல்பனா விடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொ டர்ந்து, பென்னாகரம் வட்டாட்சியர்  சௌகத் அலி, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் உதவி கல்வி அதிகாரி துளசி ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளியில் மாணவர்கள் தண் ணீர் குடிப்பதற்கென தனியாக குடிநீர் தொட்டி குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்  (ஆர்.ஓ பிளான்ட்) பயன்பாட்டில் இருப் பது தெரிய வந்தது. துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரி விக்கப்பட்ட கழிப்பறை உபயோகத்துக் காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி யிலிருந்து தடயவியல் நிபுணர் தீபா தண் ணீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளார். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக சில விஷமிகள் வதந்தியை பரப்பியுள்ள னர். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.