சேலம், பிப்.23- சேலத்திலுள்ள தனியார் கல்லுரியில் நடைபெற்ற, அகில இந்திய கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டு, கருத்துரையாற்றினர். தமிழ்நாடு ஸ்டேட் சென்டர் மற்றும் சோனா தியாகரா ஜர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சோனா தொழில் நுட்பக் கல்லூரி கல்வி குழுமம் இணைந்து “இந்தியா வில் வெள்ள மேலாண்மை மற்றும் தணிப்பு உத்திகள் வலிமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் அகில இந்திய கருத்தரங்கம் பாலிடெக்னிக் கல்லூரி கலைய ரங்கில் வெள்ளியன்று துவங்கியது. துவக்க விழாவிற்கு சோனா கல்வி குழுமங்களின் தலைவர் சொ.வள்ளி யப்பா தலைமை வகித்தார். ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஜல் சக்தி அமைச்சகம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத்துறை செயலாளர் அழகேசன் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து பேருரையாற்றி னார். இந்நிகழ்ச்சியில் தியாகராஜர் ஐடிஐ முதல்வர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாண விகள் பலர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் கருத்துரையாற்றுகின்றனர்.