districts

img

இருக்கும் ஆரோக்கியமும் கெட்டுப்போகும்

கோவை, அக்.13- பராமரிப்பின்றி உள்ள  கோவை செல்வ சிந்தாமணி  குளம் மற்றும் நடை பாதையை சீரமைக்க வேண் டும் என நடை பயிற்சி மேற் கொள்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை, பேரூர் சாலை யில் உள்ள செல்வ சிந்தா மணி குளத்தை பொலிவுறு  நகரம் திட்டத்தின் கீழ் 2021  ஆம் ஆண்டு கோவை மாநக ராட்சி புனரமைப்பு பணி களை மேற்கொண்டது. இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும்  இயந்திரங்களையும் பொருத்தப்பட் டுள்ளன. அதன் பிறகு மாநகராட்சி அதி காரிகள், இதன் பக்கம் திரும்பிக் கூட  பார்க்கவில்லை. குளத்தை சுற்றி ஏராளமா னோர் நாள்தோறும் நடைபயிற்சி மேற் கொள்கின்றனர். சுத்தமான காற்றை சுவாசித்து ஆரோக் கியமாக வாழ வேண்டும் என்பதற்காக பயிற்சி மேற்கொள்பவர்கள் செல்வ சிந்தா மணி குளத்திற்கு நடைப் பயிற்சிக்கு வந்தால்,  இருக்கும் ஆரோக்கியமும் கெட்டுப்போகும் என்கின்றனர், இப்பகுதி பொதுமக்கள்.  இதுகுறித்து, அப்பகுதியினர் கூறுகை யில், மூன்றாண்டுகளாக இந்த குளம் பரா மரிக்கப்படவே இல்லை. தற்போது இந்த  பகுதி புதர்மண்டி கிடக்கிறது.  தெரு நாய் களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. நடைபாதை ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் விளக்கு கள் எரிவதில்லை. இதனால், சமூகவிரோதி களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள் பவர்கள் அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கழிப்பிட வசதி இல்லை.  எனவே குளத்தையும், நடைபாதை யையும் பராமரிக்க வேண்டும். குளத்தை  சுற்றி தெரு விளக்குகளை எறிய விட வேண்டும். ஆங்காங்கே கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட வேண்டும்.  நீர் வெளி யேரும் பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற வேண்டும். குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.