districts

img

ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

நாமக்கல், ஜன.12- நாமக்கல் சந்தையில் சனியன்று ஒன்றரை கோடி  ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே வாரச் சந்தை அமைந்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை நாட்களில் சந்தை கூடுவது வழக்கம். திருச்சி, நாமக் கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், ஆடுகளை  கொண்டு வந்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை  செய்வது வழக்கம். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கர்நாடகா, ஆந் திரா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிக ளும், நாமக்கல் வாரச்சந்தைக்கு வந்து, ஆடுகளை வாங்கி லாரிகளில் ஏற்றி செல்வர். இந்தாண்டு பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு, சனியன்று நடைபெற்ற ஆட் டுச்சந்தைக்கு ஏராளமான வெள்ளாடு, செம்மறி ஆடுகள்  விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை வியா பாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஆடுகளின் எடைக்கு தகுந்தாற்போல ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25  ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆட்டுக்குட்டி கள் ரூ.1500 முதல் ரூ.2500 வரை விற்பனையானது. மொத் தம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற் பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.