கோவை, ஜன.18- பொதுத்துறை நிறுவனமான பிஎஸ் என்எல்-க்கு 5ஜி அலைக்கற்றை அனு மதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் “செல்பி வித் பிஎஸ்என்எல்” என்ற நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவ னமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4ஜிக்கான தொழில்நுட்ப உதவியும், நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அதே போல 5ஜி அனுமதி தற்போது பல தனியார் கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. ஆனால், பிஎஸ்என்எல் புறக் கணிக்கப்பட்டுள்ளது. பெற்ற பிள்ளையை தவிக்கவிடும் ஒன்றிய அரசை கண்டித்தும், திட்டமிட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலி வடைய செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக் கையை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் “செல்பி வித் பிஎஸ்என்எல்” என்கிற நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ் என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த நூதன போராட்டத்திற்கு வாலி பர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செய லாளர் கே.எஸ்.கனகராஜ், இப்போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து வாலிபர் சங்க செயலாளர் கே.எஸ்.கனகராஜ் கூறுகையில், தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை துவங்கியுள்ள காரணத்தால் பள்ளி, கல் லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் துவங்கியுள்ளன. பல்வேறு விதமான வேலைகளையும் வீட்டிலிருந்தே ஆன் லைன் மூலமாக செய்யச்சொல்லி அரசு வழி காட்டியுள்ளது. ஆன்லைன் பயன்பாடு அதி கரித்து வருகின்ற நேரத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கடுமை யான கட்டண உயர்வை செய்துள்ளன. ஏற்க னவே, பெரும் தொற்றின் காரணமாக வழக் கமான வருமானத்தை இழந்துள்ள மக்கள், தற்போது இணைய தொடர்புக்காக அதிக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் பிஎஸ் என்எல் நிறுவனம் குறைவான கட்டணங் களுடன் சேவையாற்றி வருகின்றது. எனவே, ஒன்றிய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5ஜி அலைக்கற்றை உரிமையையும், அதை செயல்படுத்துவ தற்கான தொழில்நுட்ப உதவிகளையும், நிதியையும் உடனடியாக வழங்க வேண் டும். தனியார் தொலைதொடர்பு நிறுவனங்க ளின் கட்டண உயர்வை குறைக்க அரசு தலை யிட வேண்டும், என்றார்.
திருப்பூர்
திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு வாலிபர் சங்க மாவட்ட துணைச் செய லாளர் எஸ்.அருள் தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணைத் தலைவர் உமா சங்கர், மாவட்ட நிர்வாகிகள் சஞ்சீவ், சதீஸ், சந்தோஸ், மாணவர் சங்க மாவட்ட செயலா ளர் சம்சீர் அகமது, பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி பா.சௌந் தரபாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கல்யாணராமன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர். இதேபோன்று ஊத்துக்குளி, பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் வாலிபர் சங்கத்தின் சார்பில் இயக்கம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன் தலை மையில் போராட்டம் நடைபெற்றது. இதில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சசி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் செ.நவீன் குமார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி கள் எஸ்.மாலதி, பி.கிருஷ்ணமூர்த்தி, ஒப் பந்த ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் எம்.சையத் இத்ரீஸ், கிளைச் செயலாளர் கே.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.