திருப்பூர், மே 10- தேசிய கைப்பந்து போட் டிக்கான தமிழ்நாடு அணிக்கு வீரர்களை தேர்வு போட்டியா னது பல்லடம் அருகேயுள்ள குங்குமபாளையத்தில் நடை பெற்றது. வாலிபால் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் மாகா ராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் உள்ள இஸ் லாம்பூரில் 21 வயதிற்குட் பட்ட ஆண்கள் மற்றும் பெண் கள் கலந்து கொள்ளும் அகில இந்திய கைப்பந்து போட்டி மே 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள் ளும் தமிழ்நாடு அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி திருப்பூர் மாவட்டம் பல்ல டம் அருகேயுள்ள குங்குமபாளையத்தில் உள்ள ஒயிட் கிளவுட்ஸ் வேர்ல்டு பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 70 ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டனர். அதில் முதல் சுற்றில் 18 ஆண்கள், 18 பெண்கள் தேர்வு பெற்றனர். அதைத் தொடர்ந்து இறுதி சுற்று போட்டியில் 12 ஆண்கள், 12 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக, இந்த போட்டியை ஒயிட் கிள வுட்ஸ் பள்ளி தாளாளர் சேதுராம், கைப்பந்து கழக துணைத்தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிக் கான ஏற்பாடுகளை மைக்ரோ கைப்பந்து செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் தங்க மணிகுமார், துணைசெயலாளர்கள் கிருஷ் ணண், விஜயகுமார், கீர்த்திசரண் ஆகி யோர் செய்திருந்தனர்.