தாராபுரம், நவ. 29- தாராபுரத்தில் நீதிமன்ற உத்தரவுபடி நஷ்ட ஈடு தொகை வழங்காத அரசு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கோவை அவிநாசிரோடு ஏரோ ட்ராம் லோட்டஸ் தெருவை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் சுப்பிரமணி (48) கூலி தொழிலாளி. கடந்த நவ. 14. தேதி 2013 ஆம் ஆண்டு அன்று சுப்பிரமணி கோவையிலிருந்து கார் மூலம் தாராபுரத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக காரை ஓட்டிக் கொண்டு சென்றார். அப்போது தாராபுரம் கோவை ரோடு ருத்ராவதி கொக்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது கோவையில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி கோவை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்த னர். சுப்பிரமணி சார்பில் தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் மோட் டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்யப்பட் டது.
வழக்கை விசாரித்த தாராபுரம் சார்பு நீதிபதி கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சுப்பிரம ணிக்கு ரூ. 2 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஐ நஷ்ட ஈடுதொகையாக வழங்க உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நஷ்ட ஈடு தொகையை கோவை அரசு போக்குவரத்து கழகம் செலுத் தவில்லை. இதையடுத்து சுப்பிரமணி சார்பில் தாராபுரம் வழக் கறிஞர் எஸ்.டி.சேகர் சார்பு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த தாராபுரம் சார்பு நீதிபதி தர்ம பிரபு, கோவையிலிருந்து திருநெல் வேலி செல்லும் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தர விட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் இருந்து திரு நெல்வேலி செல்லும் பேருந்ததை தாராபுரம் பேருந்து நிலை யத்தில் நீதிமன்ற ஊழியர் ஜெயஸ்ரீ மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளி சுப்பிரமணியுடன் பறிமுதல் செய்ய சென்றார். பறிமுதல் உத்தரவை பெற்றுக் கொண்ட பிறகும் அரசு போக்கு வரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பாதிக்கப்பட்ட தொழி லாளி சுப்பிரமணியத்தை தாக்கி விட்டு பேருந்தை எடுத்து சென் றனர். காயமடைந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணி தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்ற உத்திரவை மதிக்காமல் பாதிக் கப்பட்ட தொழிலாளியை தாக்கிவிட்டு பேருந்தை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.