districts

img

கஞ்சா செடி பயிரிட்டவர்கள் கைது 15 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை பறிமுதல்

கோவை, டிச. 15- கோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா செடி  பயிரிட்ட நான்கு பேர் கைது செய்யப் பட்டு, அவர்களிடமிருந்து 15 கிலோ  கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியது. பெரியநாயக்கன்பாளையம் பசு மணி என்ற கிராமத்தில் பழங்குடியின  மக்கள் வசித்து வருகின்றனர். அக் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள்  அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை  பயிரிட்டு வருகின்றனர். இந்நிலை யில் கஞ்சா செடிகளை பயிரிட்டுள் ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் உட் கோட்ட துணை காவல் கண்காணிப் பாளர் நமச்சிவாயம், காவல் ஆய் வாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண் டனர். அங்கு உள்ள நிலத்தில் ஊடு  பயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிந்தது.  இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில், கஞ்சா செடிகளை பயிரிட்டது பசு மணி கிராமத்தில் வசிக்கும் செல்லன் (60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது  தெரிய வந்தது.

பின்னர், நான்கு பேரையும் கைது செய்து அங்கு பயிரி டப்பட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறி முதல் செய்தனர். இச்சம்பவத்தை அறிந்த, கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவ இடத்திற்கு சென்று, பறிமுதல்  செய்யப்பட்ட கஞ்சா செடிகளை பார்வையிட்டார். பின்னர், அங் கிருந்த மக்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு விரோதமான செயல் களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்தார். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல்  தெரிவிக்க பொதுமக்கள் தயங் காது கோவை மாவட்ட காவல் கட்டுப் பாட்டு அறை எண் 94981-81212 மற்றும்  வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.  இதற்கிடையில், மேட்டுப் பாளையம் - சிறுமுகை சாலை, அறி வொளி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றி ருந்தார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசா ரணை நடத்தினர். அதில், அந்த நபர்  விருதுநகர் மாவட்டம், வஉசி வீதி யைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் (24)  என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய் தனர். மேலும், அவரிடமிருந்து ஒரு  கிலோ கஞ்சாவை போலீசார் பறி முதல் செய்தனர்.