districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல், மே 12- நாமக்கல் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படி யும், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவுரையின் பேரிலும், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பகுதிகளில் வட்டார போக்குவரத்து துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், நாமக்கல் வடக்கு, தெற்கு மற்றும் திருச்செங்கோடு வட்டார போக்கு வரத்து அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராசி புரம், பரமத்தி வேலூர் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர்க ளால் 3,811 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  அதில் 891 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக் கப்பட்டது. மேலும், ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 633 வரியும், ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 200 அபராதமும் வசூல் செய்யப் பட்டது. அதேபோல் 531 வாகனங்களுக்கு ரூ.20 லட்சத்து  81 ஆயிரத்து 800 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது.மேலும், தகுதிசான்று புதுப்பிக்காதது,  வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனம் என போதிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து துறையினர் தெரி வித்துள்ளனர்.

சாலையோரம் வீசப்பட்ட காலாவதியான மருந்துகள்

ஈரோடு, மே 12-  ஈரோடு அருகே சாலையோரம் மருந்து, மாத்திரை உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈரோடு சாஸ்திரி நகர் அடுத்த குமரன் நகர் பகுதியில் புதனன்று காலை சாலையோரம் ஏராளமான மருந்து, மாத்திரை உட்பட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந் துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சுகாதார ஆய்வாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் பின்னர், மாநகராட்சி பணியாளர்கள் மருத்துவ கழிவுகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், மருத் துவ கழிவுகளை கொட்டியவர்கள் குறித்து, உரிய விசா ரணை மேற்கொண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவர் மீது தாக்குதல் தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு

கோவை, மே 12- கோவையில் கொடுத்த கடனை திருப்பி கேட்டதில் ஏற்பட்ட தகராறில், இரும்பு வியாபாரம் செய்து வரு பவரை தாக்கிய தந்தை, மகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்தவர் முகமத் அப்துல்லா (38). இரும்பு வியாபாரம் செய்து வரும் இவரி டம், அதேபகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு காரை அடமானம் வைத்து ரூ.5.5 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு முகமத் அப்துல்லா, ரியா சிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், ரியாஸ் ரூ.50 ஆயிரத்தை முகமத் அப்துல்லாவிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை தருமாறு ரியாசிடம், முகமத் அப்துல்லா கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதன்பின், வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த ரியாஸ் மற்றும் அவரது தந்தை ரபீக் ஆகிய இருவரும் சேர்ந்து முகமத் அப்துல்லாவை சராமாரியாக அடித்து உதைத்து மிரட்டி விட்டு சென்றனர். இதில் முகமத் அப்துல்லாவிற்கு மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் முகமத் அப்துல்லாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், போத்தனூர் காவல் துறையி னர் ரியாஸ் மற்றும் அவரது தந்தை ரபீக் ஆகிய இருவர் மீதும் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 பொது விநியோகத்திட்ட  மக்கள் குறைதீர் முகாம் 

நாமக்கல், மே 12- நாமக்கல்லில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்  முகாம் சனியன்று (மே 14) நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத் தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத் தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019  படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவை களை அனைத்து தரப்பு மக்களுக்கும்  வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட் டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் மே 14 ஆம் தேதி   காலை 10 மணி முதல் நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளை யம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள்  சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 தொடர் பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு, இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், குறை தீர் முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரை களை தவறாமல் கடைபிடிக்குமாறும்,  நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன் தெரிவித்துள்ளார்.

மரம் விழுந்து இளைஞரின்  கால் துண்டிப்பு

கோவை, மே 12- கோவையில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த நபர்கள் மீது மரம் விழுந்ததில், ஒருவரின் கால் துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக  பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக பல்வேறு பகுதியில்  மரங்கள் சாய்ந்துள்ளன. இந்நிலையில், போத்தனூரை சேர்ந்த பரூக் என்பவர் கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.  அப்போது அங்கிருந்த மரம் ஒன்று  முறிந்து அவர் மீது விழுந்துள்ளது. மரம் விழுந்ததில் அவருடைய கால் இரண்டு துண்டாகியது. மேலும், அருகிலிருந்த பெண் ஒருவர் மீது மரம் விழுந்த தில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கி ருந்த நபர்கள் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்திர பதிவிற்கு வந்த நபர் மீது மரம் விழுந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநரின் கோவை வருகை பாரதியார் பல்கலை.யில் தீவிர பாதுகாப்பு

கோவை, மே 12- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை பாரதியார் பல் கலைக்கழகத்திற்கு வருவதை முன்னிட்டு, அங்கு ஆயிரத் திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று (இன்று) 37 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர் களுக்கு  பட்டங்களை வழங்குகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி  சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கி ருந்து கல்லூரிக்கு கார் மூலம் செல்கிறார். இதன்பின் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.  தமிழக ஆளுநரின் வருகையையொட்டி, பாரதியார் பல்கலைக்கழகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 15 காவல் துணை ஆணை யர்கள் தலைமையில் 7 ஏடிஎஸ்பிக்கள், 40 ஆய்வாளர்கள்  மற்றும் 1200 போலீசார்  நியமிக்கப்பட்டு கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர். பாரதியார் பல்கலைகத்திற்கு அருகே வருபவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்த பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

ஈரோடு: வாகன போக்குவரத்து புள்ளி விவரம் சேகரிப்பு

ஈரோடு, மே 12- நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு சாலைகளில் வாகன போக்குவரத்து புள்ளி விவரம் சேகரிப்பு பணி நடை பெற்று வருகிறது. ஈரோடு மாநகரையொட்டி பெருந்துறை, சத்தி, பவானி, பள்ளிபாளையம், சென்னிமலை, பூந்துறை, மூலனூர், கரூர்  ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை யாகும். இந்த சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சாலை விரிவாக்கம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகள் மேற் கொண்டு வருகிறார்கள். கடந்த 9 ஆம் தேதி முதல் 7 நாட்க ளுக்கு இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ் சாலைத்துறை பணியாளர்கள் சாலைகளில் செல்லும்  வாகனங்களின் புள்ளி விவரங்களை சேகரித்து வருகின்ற னர்.  இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் கூறியதாவது, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந் தமான சாலைகளில் வாகன போக்குவரத்து குறித்த புள்ளி  விவரங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சேகரிக்கப்படும். அதன்படி ஈரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலை களில் புள்ளி விவர சேகரிப்பு பணி தொடங்கி நடந்து வரு கிறது.7 நாட்கள் புள்ளி விவர சேகரிப்புக்கு பின்னர், ஆய்வு  முடிவுகள் அனைத்தும் சராசரி அடிப்படையில் சரிசெய்யப் பட்டு ஆய்வு அறிக்கை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக் கப்படும். இந்த அடிப்படையில்தான் வரும் காலங்களில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும், இவ் வாறு அவர் கூறினார்.

இந்தியன் வங்கியில் ரூ 2.61 கோடி மோசடி செய்த 4 பேருக்கு தண்டனை  

சென்னை, மே 12- இந்தியன் வங்கியில் உயிரி உரங்கள் தயாரிப்பு நிறுவன மான சன் பயோ மெனியூர் பிரைவேட் லிமிடெட்டின் இயக்கு னர்கள் சக்திவேல், உதயகுமார் மற்றும் வீரபாண்டிக்கிளை யின் மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறை சிறப்பு நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி குற்றப் புலனாய்வுத் துறையின் பொருளாதார குற்றவியல் பிரிவு இந்த வழக்கை பதிவு செய்திருந்தது. வங்கியின் வீரபாண்டிக் கிளை மேலாளர் பாலசுப்பிரமணியம், சன் பயோ மெனியூர்  பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர்கள் சக்திவேல், உதய குமார் ஆகியோருடன் இணைந்து போலியான ஆவணங் களை முன்வைத்து இந்த நிறுவனத்திற்கு கடனை வழங்கி யிருப்பதாகவும், படிப்படியாக வழங்க வேண்டிய கடன் தொகையை விதிகளை மீறி ஒட்டு மொத்தமாக வழங்கிய விதத் திலும், வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக பால சுப்பிரமணியம் மீது குற்றம் சுமத்தப்பட்டு வியாழனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  சன் பயோ மெனியூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும், இயக்குனர்கள் சக்திவேல், உதயகுமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு கடுங் காவல் தண்டனையும், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும் வங்கிக்கிளை மேலாளர் பாலசுப்பிரமணியத்திற்கு 2 ஆண்டு  கடுங்காவல் தண்டனையும், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராத மும் விதித்து நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பு வழங்கினார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்தில் வேலை

கோவை, மே 12- நகர்ப்புற கற்றல் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ்  புதிய பட்டதாரிகளுக்கு கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவ னத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, துலிப் திட்டத்தின் கீழ் புதிய பட்டதாரிகள் தன்னம்பிக்கை பெறுவதற்கும், மாநகராட்சிக்கு புதுமையான யோசனை களை வழங்குவதற்கும் அரிதான வாய்ப்புகளை கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளது. இத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங் களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண் டும். இந்த வேலை வாய்ப்பு பயிற்சிக்கான கால அவகா சம், அதிகபட்சம் ஆறு மாதங்களாகும். இப்பயிற்சிக் கான மாத ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரம் ஆகும். விண்ணப்ப தாரர்கள் விஷுவல் கம்யூனிகேசன், பி.ஆர்க்/எம்.ஆர்க், பி.இ/பி.டெக் (ஐ.டி), பி.இ/பி.டெக் (சிவில்), எம்.பி.ஏ/பி.ஜி. டி.எம், தமிழ் முதுகலை, ஆங்கிலம் முதுகலை பட்டம் பெற்றி ருக்க வேண்டும். மேலும், தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு இந்தியா முழு வதிலுமுள்ள வாய்ப்புகளை ஒரே மேடையில் ஒருங் கிணைத்து நகர்ப்புற நிர்வாகத்தில் விண்ணப்பிக்க இத் திட்டம் அனுமதிக்கிறது. http://internship.aicte-india.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 24 ஆம் தேதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

நெல் கொள்முதல் - தனியார் அரவை ஆலைகளுக்கு அழைப்பு

ஈரோடு, மே 12- நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப் பது முதல் கழக கிடங்குகளில் அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில்  கழக அரவை முகவர்களை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மற்றும் கழகத்தில் இணையாத தனி யார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. எனவே, இந்நிகழ்வில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து, மேலும் கூடு தல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம், மண்டல அலுவலகம், மாணிக் கம்பாளையம் ஹவுசிங் யூனிட்,  நசியனூர் ரோடு,  ஈரோடு - 638011 அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி விடுத்த செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் செ.நடேசன் துணைவியார் ந.பாக்கியலட்சுமி காலமானார்

திருப்பூர், மே 12- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன் னாள் மாநிலப் பொதுச்செயலாளர் செ.நடேசனின் துணைவி யார் பாக்கியலட்சுமி செவ்வாயன்று காலமானார். அவ ருக்கு வயது 73.  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளரும், இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்ட மைப்பின் முன்னாள் பொதுச்செயலாளராக செயல்பட்ட வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ரும், தமுஎகச மாவட்ட துணைத் தலைவருமான எழுத்தா ளர் செ.நடேசனின் துணைவியார் ந.பாக்கியலட்சுமி உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார். அவரது மறை விற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை காலை 11.15 மணிக்கு ஊத்துக்குளி ஆர்.எஸ்.இல் பாரதி இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மணிமேகலை, மாநில துணை பொதுச் செயலாளர் கணேசன், இந்திய பள்ளி ஆசி ரியர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ், மாநில துணைத் தலைவர் முருகன், மாநில துணைச் செயலாளர் ஷகீலா, திருப்பூர் மாவட்ட செயலா ளர் பிரபு செபாஸ்டியன், மாவட்டப் பொருளாளர் பா.ஜெய லட்சுமி உட்பட பல்வேறு பகுதி நிர்வாகிகள் நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர், ஊத்துக்குளி பேரூராட்சி 7ஆவது வார்டு உறுப் பினர் கு.சரஸ்வதி, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் பி.ஆர்.கணேசன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், உள்பட ஏராளமானோர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தி செ.நடேசனுக்கு ஆறுதல் தெரிவித்த னர். இதன்பின் புதனன்று திருப்பூர் தெற்கு மின்மயானத் தில் பாக்கியலட்சுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கோவை: குழந்தையுடன் கர்ப்பிணி மாயம்

கோவை, மே 12- கோவையில் குழந்தை யுடன் கர்ப்பிணி மாயமான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பீடம் பள்ளியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (35). இவரது மனைவி பிரீத்தி (29). இவர் களுக்கு கடந்த 4 வருடங்க ளுக்கு முன்பு திருமணமாகி யுவந்திகா என்ற 11 மாத குழந்தை உள்ளது. தற் போது பிரீத்தி 5 மாத கர்ப் பிணியாக உள்ளார். இந் நிலையில், மோகன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, தனது மனைவி மற் றும் குழந்தை வீட்டில் இல் லாததை கண்டு அதிர்ச்சிய டைந்தார்.  இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் தேடி யும், உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு விசா ரித்தார். ஆனால், மனைவி மற்றும் குழந்தை குறித்த எவ்வித தகவலும் கிடைத் காத நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் புகார ளித்தார். இதுதொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.