கோவை, ஜூலை 24– ஒடுக்கப்பட்ட மக்களின் உரி மைப்போராளி தோழர் சீரபாளையம் தியாகி ராக்கியண்ணனின் 66 ஆவது ஆண்டு நினைவுதினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. கோவை மதுக்கரை ஒன்றியத்திற் குட்பட்ட சீரபாளையம் பகுதியில் செங்கொடி இயக்கத்தின் தளபதி யாக திகழ்ந்தவர் தோழர் சீரபாளை யம் தியாகி ராக்கியண்ணன். மனித குல விடுதலைக்கு மார்க்சியமே தீர்வு, உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்ட களத் தில் முன்னின்றவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடியவர். நம்ம சாதியில் பிறந்து அந்த சாதிக்கு சேவகம் பன்னுறான் என ஆதிக்க சாதியினரின் வெறியின் உச்சத்தில் தோழர் ராக்கியண் ணன் படுகொலை செய்யப்பட் டார். செங்கொடி இயக்கத்தின் மங் காத ஒளிவிளக்காய், ஒடுக்கப்பட்ட மக்களின் குல தெய்வமாய் திகழ்கிற தோழர் ராக்கியண்ணன். இவரின் 66 ஆவது ஆண்டு நினைவுதினம் ஞாயி றன்று சீரபாளையத்தில் அனுசரிக் கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இனைந்து இந்த நினைவேந்தல் கூட்டம் நடை பெற்றது. சிபிஎம் மதுக்கரை ஒன்றிய செய லாளர் பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிபிஐ மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், சிபிஎம் விவசாய சங்க மாவட்ட செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தலைவர் வி.பி.இளங்கோவன், சிபிஎம் குனிய முத்தூர் நகர செயலாளர் நாகேந்தி ரன் மற்றும் சிபிஐ மதுக்கரை ஒன்றிய செயலாளர் வி.இளங்கோவன், ஏஐடி யுசி சிமென்ட் அன்ட் பொது தொழி லாளர் சங்கத்தின் செயலாளர் ஜி.பி. சக்திவேல் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.