சேலம், ஆக.17- வீராணம் ஏரியில் வண்டல் மண் கொள்ளையடிக்கப்பட்டு வரும் சம்பவம் குறித்து, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். வீராணம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் சிலர், நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்க ளில் கடந்த ஒரு வாரமாக வண்டல் மண்ணை எடுத்துச் சென்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நிலம் சமப்படுத்து வதற்காக விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மழைக் காலம் என்பதால் ஏரியின் கரை பலமிழந்து, தண்ணீர் விவசாய நிலத்திற்குள்ளும், வீடுகளுக்குள்ளும் செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் கண்காணிக்கப்படும் என தெரி வித்து இருந்தாலும் கூட, ஏரியில் மணல் கொள்ளையடிப் பதை கண்காணிக்க எந்த அதிகாரிகளும் நியமிக்கப்பட வில்லை. எனவே, முறையாக இப்பணியை கண்காணித்து விவசாயிகள் பயன் பெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.