districts

img

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” முகாம் துவக்கம்

சேலம், ஜன.31- சேலம் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி புதனன்று துவங்கி வைத்து, பொதுமக்களிமிருந்து குறைகளை கேட்டறிந்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வெள் ளார் ஊராட்சியில் “உங்களைத் தேடி, உங் கள் ஊரில்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சி யர் ரா.பிருந்தாதேவி, தலைமையில் புத னன்று நடைபெற்றது. அப்போது அவர் பேசு கையில், மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, புதனன்று மேட்டூர் வட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மேட்டூர் வட்டத்தில் உள்ள 48 கிராமங்கள், 7 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி உள் ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் பல்வேறு  குழுக்களாக அலுவலர்கள் பிரிக்கப்பட்டு, காலை 9 மணி முதல் அங்குள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள் உள் ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டுள்ளனர். மாலையில் தெரு விளக்கு களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், மீண்டும் வியாழனன்று (இன்று) காலை குடிநீர் விநி யோகம், தூய்மைப்பணிகள், காலை உண வுத் திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். இப்பணிகளை மேற்கொள்ள 220 அரசு அலுவலர்கள் தொடர்ந்து பணி யாற்றி வருகின்றனர், என்றார். முன்னதாக, தெத்திகிரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகளை ஆய்வு மேற் கொண்டு, மாணவ, மாணவிகளின் கற்றல்  திறன் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண் டார். இந்நிகழ்வில், மேட்டூர் சட்டமன்ற உறுப் பினர் எஸ்.சதாசிவம், கூடுதல் ஆட்சியர் அலர் மேல் மங்கை, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ரேவதி ராஜசேகர், வருவாய் அலுவ லர் பெ.மேனகா, சார் ஆட்சியர் நே.பொன் மணி, ஊராட்சி மன்றத் தலைவர் சுகந்தி பழ னிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.