கோவை, பிப்.20- கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் பயன்படுத்தப் பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரியில் வேட்பாளர்கள் முன்னிலையில், சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு டன் வைக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 59.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், பேரூராட்சி பகுதிகளில் 73.83 சதவிகிதம், நகராட்சி பகுதி களில் 67.09 சதவிகிதம், மாநகராட்சி பகுதிகளில் 53.61 சத விகிதம் பதிவானது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதி களை காட்டிலும், பேரூராட்சி பகுதிகளிலேயே அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும், அமைக்கப்பட்டி ருந்த வாக்கு மையங்களில் பயன்படுத்தப்பட்ட இவிஎம் இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப் பட்டு, கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி பொறி யியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.கோவிந்த ராவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி துணை ஆணையர் மோ.சர்மிளா மற்றும் வேட் பாளர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங் கள், அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதன் பின் செவ்வாயன்று (நாளை) வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ள நிலையில், இவிஎம் இயந்திரங்களை கண் காணிக்க மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.