உதகை, மே 29- உதகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 8 கட்டிடங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவ டிக்கை எடுத்து உள்ளனர். நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி யாகவும், அதிக வனவிலங்குகள் வசிக்கும் இடமாகவும் உள்ளது. இந் நிலையில் நீலகிரியின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கிலும், பேரிடர்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும், மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்ற இடங்களை தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக் கூடாது. குடியிருப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள், ஓட் டல்கள் கட்டக்கூடாது, 7 மீட்டர் உய ரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனு மதி இல்லை உள்ளிட்ட விதிமுறை கள் வகுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த விதிகளை மீறி சிலர் கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்க ளில் முறையாக கணக்கெடுப்பு நட வடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தர விட்டு உள்ளது. இந்த உத்தரவின் படி, உதகை நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாப் பய ணிகளின் வருகை குறைவாகவே இருந்த நிலையில், தற்போது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் சுற்றுலாப்பயணி களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஒருபுறம் விதிமுறைகளை மீறி தங்கும் விடுதிகள், வணிக நிறு வன கட்டிடங்கள் அதிகரித்து வருவ தாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தொடர்ந்து வந்தது. இதன் பேரில் உதகை வட்டாட்சியர் ராஜ சேகர், நகராட்சி திட்டமைப்பு அதி காரி ஜெயவேல், கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியா ளர்கள் ஆய்வு செய்து விதி மீறிய கட்டிடங்களுக்கு வெள்ளியன்று சீல் வைத்தனர். அப்போது கட்டிட உரிமையாளர்கள் அதிகாரிகளு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் கூறுகையில், உதகை நகராட்சியில் திட்ட ஒப்புதல் வாங்கிய பின்னர் அதற்கு மாறாக புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஜெம் பார்க் ஓட்டல் அருகே உள்ள பகுதி, தமிழகம் சாலை, கிளப் ரோடு, குட்ஷெட் ரோடு, ரெட் கிராஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட் டது. ஏற்கனவே இது குறித்து கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் முறையாக வினியோகிக்கப்பட் டது. விதிமுறையை மீறி கட்டப் பட்ட கட்டிடங்கள் குறித்து கணக் கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த கட்டிடங் களுக்கு கண்டிப்பாக சீல் வைக்கப்ப டும் என்றார்.