ஈரோடு, ஜன. 12- தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வு செய் யப்பட்டன. ஈரோடு மாவட்டம், பவானி அருகே வசித்து வருபவர் இளங்கோ. இவரது முன்னோர்களுக்கு பெருந்துறை அருகே மடத்துப்பாளையத்தில் 15 ஏக்கர் 36 சென்ட் நிலம் இனாம் சர்வேயாக வழங்கப்பட்டது. குறவர் இனத்தவருக்கு வழங் கப்பட்ட நிலத்தில் இரண்டரை ஏக்கர் மட்டும் தற்போது உரி யவர்களிடம் உள்ளது. மீதி நிலம் உயர்வகுப்பைச் சேர்ந்த வர்களிடம் உள்ளது. இந்நிலையில், நிலத்தை இளங்கோ மற்றும் அவரது வகையறாக்களுக்கு மீட்டுத் தரக்கோரி மனு செய்யப்பட் டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை இல்லாத நிலையில், மேல் முறையீடு செய்திருந்தார். அதன்பேரில் தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி ஆவணங்களைப் பார்வையிட உத்தர விடப்பட்டது. அதன் அடிப்படையில் ரத்னம், இளங்கோ உள் ளிட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவ ணங்களைப் பார்வையிட்டனர்.