districts

img

தேர்தல் செலவினங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருப்பூர், மார்ச் 22- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட தேர்தல்  செலவினங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் செலவின பார்வையாளர் சந்திப்குமார் மிஷ்ரா  தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலரான, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் முன்னி லையில் வெள்ளியன்று நடைபெற்றது.  இதில், நீலகிரி பாராளுமன்றத் தொகுதி செலவின பார்வையாளர் சந்திப்குமார் மிஷ்ரா  கூறியதாவது, இந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்ட குழுக்கள் தங்களுக் கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக,  உரிய ஆவணங்கள் இன்றி நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்துச் செல்வதும்  மதுபானங்கள் மற்றும் இதர பரிசுப்பொருட்கள் வழங்குவது குறித்து தகவல் பெற்றப் பட்டால் உடனடியாக சமந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண் டும். மேலும், கட்சி தொடர்பான கூட்டங்களில் சுவர் விளம்பரம், பேனர், போஸ்டர், துண்டு  பிரசுரங்கள், பந்தல், மைக்செட், வாகனங்கள், செய்தித்தாள் மற்றும் மின்னணு ஊடகத்தில்  விளம்பரங்கள் போன்ற விபரங்களை முழுமையாக வீடியோ பதிவு செய்து அதன் முழுவி பரத்தினை அறிக்கையாக நாள்தோறும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும். வேட்பாளர்களால் செய்யப்படும் அன்றாட தேர்தல் செலவுகளை கண்காணிப் பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் செலவு கண்காணிப்பு குழுவினர் கண்கா ணிக்க வேண்டும் என தேர்தல் அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா,  மாவட்ட  உதவி ஆட்சியர் கிர்திகா எஸ்.விஜயன் மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவ லர்கள் கலந்து கொண்டார்கள்.