districts

img

ஹிரோஷிமா தினத்தை முன்னிட்டு பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி

திருப்பூர், ஆக.5- ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்க ளுக்கு அறிவியல் அற்புதங்கள் நிகழ்ச்சி  செல்வநாயகி மெட்ரிக் பள்ளியில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்  திருப்பூர்  வடக்கு கிளை சார்பில் சனியன்று நடை பெற்றது. செல்வநாயகி மெட்ரிக் பள்ளி தாளா ளர் பழனிச்சாமி தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல் வர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித் தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட கருத்தாளர் அஜித் குமார் குழந் தைகளுக்கு பல்வேறு அறிவியல் செயல்பாடுகளை செய்து காண்பித் தார். மேலும் ஹிரோஷிமா நாகசாகி தினத்தை பற்றி கூறுகையில், அணு ஆயு தங்கள் மனித குலத்திற்கே தீமை என்று  வி.ராமமூர்த்தி தெரிவித்தார். உலகில்  இனி எந்த இடத்திலும் அணு ஆயுத போரோ அல்லது மக்க ளிடையே சண்டைகளோ மூலக் கூடாது  என அனைத்து மாணவர்களும், ஆசிரி யர்களும் உறுதியேற்று கொண்டனர்.