ஈரோடு, ஜூலை 20- டி.ஜி.புதூர் மாண்ட்போர்ட் பள்ளி (சி.பி.எஸ்.இ) யில் புதனன்று “மாண்ட் எக்ஸ்போ -2022” அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அலெக் ஸாண்டர், அருட்தந்தையர்கள் மார்க் மாண்ட்போர்ட் மற்றும் எட்வின் சார்லஸ், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்.ஜோசப் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில், மாணவர்கள் 250க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை பல வண்ணமய மான பொருட்களை உபயோகப்படுத்தி காட்சிப்படுத்தினர். “அறிவியல் கண்டுபிடிப்பில்லாத உலகில் வாழ்வது மிகக் கடினம்”என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது. இக்கண்காட்சியை பார்வையிட்ட மக்கள் மாணவர்களின் திறமையை பாராட்டினர்.