districts

img

பள்ளி மாணவர் தற்கொலை: ஆசிரியை மீது நடவடிக்கை கோரி போராட்டம்

நாமக்கல், மார்ச் 24- நாமக்கல் அருகே பள்ளி மாண வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள தண் ணீர்பந்தல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம்  வகுப்பு படித்து வந்தார். இந்நிலை யில், வியாழனன்று பள்ளி ஆசி ரியை ஒருவர், மாணவன் ரிதுனை  திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால், மன முடைந்த ரிதுன், ரயில் தண்டவா ளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே காவல் துறையினர் ரிது னின், உடலை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வருகின்ற னர். இதற்கிடையே மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்று கையிட்டு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பா ளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல் துறையினர், போராட்டக்காரர் களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். ஆனால், மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஆசி ரியை மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவ தில்லை கூறி, போராட்டத்தை தொடர்ந்தனர். இதன்பின், வழக் குப்பதிவு செய்கிறோம் எனக் கூறி யதால், போராட்டம் கைவிடப்பட் டது. மேலும், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண் ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் ஆகி யோர் மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, உரிய விசாரணை மேற்கொள்ளாவிடில், மாபெரும் போராட்டம் நடைபெறும், என்ற னர்.