திருப்பூர், செப்.1 - திருப்பூர் வடக்கு ஒன்றியம் பள்ளிபாளையத்தில் அமைந் துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பிற்கு நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர்கள் சனியன்று தேர்வு செய்யப்பட் டனர். இதில் செல்லம்மாள் காலனி பள்ளி தலைமை ஆசிரியர் வே.நாகராஜ் கணேஷ் குமார் பார்வையாளராக பங்கேற் றார். தலைவர் பதவிக்கு பூங்கொடி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் துணை நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அப்பள்ளியினு டைய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், இப்பள்ளி தரை தளத்திற்கு பேவர் பிளாக் போட மூன்று லட்ச ரூபாய் செலவா கும் என்று தெரிவித்தார். எல்லா நிகழ்வுகளும் முடிவுற்ற நிலை யில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களிடம் புதுப் பணியாக, தளம் போடுங்கள் என்று சொல்லி, மாதொருபாகனார் அறக்கட்டளை சார்பாக ரூ.5000/- நன்கொடையாக தருவதாக பார்வையாளராக பங் கேற்ற ஆசிரியர் வே. நாகராஜ் கணேஷ்குமார் அறிவித் தார். இதன் தொடர்ச்சியாக பள்ளி மேலாண்மைக் குழு வுக்கு பார்வையாளர்களாக வந்திருந்த ஊர் பொதுமக்கள் மற் றும் பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்கி னர். அரை மணி நேரத்தில் ரூபாய்.2 லட்சத்து 10 ஆயிரம் வசூல் ஆனது. பள்ளி மேலாண்மை குழு தேர்ந்தெடுக்கப்பட்ட உட னேயே முதல் பணியை தீர்மானித்து, அதற்காக முதல் நன் கொடை கொடுத்து கணிசமான தொகை வசூலிக்கப்பட்ட தில் தலைமை ஆசிரியர் வே.நாகராஜ் கணேஷ்குமார் மகிழ்ச் சியுடன் நன்றி தெரிவித்தார்.