உடுமலை, ஆக. 10 - அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்ட மைப்பு கூட்டம் ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 50 சதவீதம் பள்ளிகளுக்கு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்த மாக 455 அரசு தொடக்கபள்ளிகளில் இக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை தாலுகா பகுதிகளில் இருக்கும் 42 பள்ளி களில், பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டமும், மடத்துக்குளம் தாலுகாவில் 24 பள்ளிகளிலும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பார்வையாளராக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நியமிக் கப்பட்ட அதிகாரிகள், பள்ளி மேலாண் மைக்குழுவின் நோக்கம், முக்கியத் துவம் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் தெரிவித் தார். குறிப்பாக தமிழக அரசின் கல்வி உதவி திட்டங்களான பெண் கல்வி ஊக் குவிப்பு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி னார். அரசு பள்ளிகளில் படிப்பதால் ஏற்ப டுகின்ற பல்வேறு நன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும் பள்ளி மேலாண்மை குழு என்பது ஆசிரியர், பெற்றோர், மாணவர் இடையே நல்ல ஒரு உறவினை மேம்ப டுத்தி பள்ளியின் வளர்ச்சிக்காக திட்ட மிட்டு செயல்படுகின்றது. மேலாண் மைக் குழு மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்யும் என்றும் கூட்டத் தில் கூறினார்கள். மேலும் இந்த கூட்டத் தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உத விக்குழு தலைவர், இல்லம் தேடிக் கல் வித் தன்னார்வலர், முன்னாள் மாணவர் கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பிரதிநிதி உள்ளிட்ட 24 பேர் கொண்ட உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். தேர்வு செய்த உறுப்பினர் கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.