உதகை, ஜன.31- உதகை உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட மலை வேடன் பழங்குடியின மக்கள், சாதி சான்று கேட்டு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், உதகையில் உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட பன்னிமரம், தட்டனேரி, பழங்குடியின மக்களின் பெற்றோர்களுக்கு சாதி சான்று உள்ள நிலையில், தங்களது பிள்ளைகளுக்கு 1995 முதல் பழங்குடியின சாதி சான்று வழங்காததால் பிள்ளைகளை படிக்க வைத்தும் பயன் இல்லை என்று கூறி 70 க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தை களை பள்ளி அனுப்பாமல் 5 ஆவது நாளாக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், கிராமத்தில் உள்ள நூற்று கணக் கான வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்பை பதிவு செய்து வருகின்றனர். வரு வாய் துறையினர் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய தீர்வு பெற்றுத்தரப்ப டும் என்று உறுதி கூறினாலும் 30 ஆண்டுகால மாக இதே பதிலை கூறிவருவதால் அதை ஏற்க மறுத்து வெள்ளியன்று கிராமத்தின் முகப்பு வாயிலில் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.