districts

img

பட்டியலின, பழங்குடி மக்கள் மாநாடு வீடு, வீடாக பிரச்சாரம்

தருமபுரி, மே 14- பட்டியலின, பழங்குடி மக்கள் மாநாட்டையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி யில்  வீடு, வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிராகவும், சாதி யற்ற சமத்துவ சமூகம் படைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே16ஆம்  தேதியன்று பட்டியலின, பழங்குடி மக்கள்  மாநாடு விழுப்புரம் நகராட்சி திடலில் நடை பெற உள்ளது.  இம்மாநாட்டில், திரளான பொதுமக்கள் பங்கேற்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தருமபுரி நகர் முழுவதும் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி நகராட்சி கோல்டன் பகுதியிலுள்ள வீடு, வீடாக பிரச்சாரம் நடை பெற்றது.  இந்த பிரச்சாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வே.விசுவநாதன், எஸ்.கிரைஸா மேரி,  கிளை செயலாளர் சுபா மற்றும் கே. சுசிலா, உமாசங்கரி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.