districts

img

கோவையில் கடன் வழங்குவதாக கூறி மக்களிடம் மோசடி

கோவை, அக்.11- கடன் வழங்குவதாக கூறி சுய உதவிக்குழு பெண்களிடம் வசூல் வேட்டை நடத்தி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். தருமபுரியை தலைமை இட மாகக் கொண்டு என்கேபி பினான் சியல் சர்வீசஸ் என்ற நிதி நிறுவ னத்தை நிர்மல் குமார் என்பவர்  நடத்தி வந்தார். இந்த நிறுவ னத்துக்கு கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டி, அன்னூர் ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை உண்மை என நம்பி கருமத்தம்பட்டி பகுதி யைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்கள் சுமார் 500க்கும் மேற் பட்டோரிடம் ரூ.1000 முதல் ஒரு  லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப் பட்டுள்ளது. கருமத்தம்பட்டி கிளை அலுவலகத்தில் மட்டும் சுமார் ஒரு  கோடி ரூபாய் வரை வசூல் செய் யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கடன் வழங்கி விட்டு மற்றவர்களுக்கு கடன் தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அன்னூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கிளை அலுவலகங்கள் பூட்டப்பட்டிருப்பதாக பணம் செலுத்தியவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் பணம் செலுத் தியவர்கள் நிதி நிறுவன ஊழியர் களை தொலைபேசியில் தொடர்பு  கொள்ள முயற்சித்தனர். ஆனால்,  நிறுவன ஊழியர்கள் யாரும் போனை எடுக்காததால், பாதிக்கப் பட்ட சுய உதவிக்குழு பெண்கள் கருமத்தம்பட்டி காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், கவர்ச்சி கரமான விளம்பரங்கள் மூலம் கடன்  வழங்குவதாக கூறி தனியார் நிதி  நிறுவன ஊழியர்கள் கோடிக் கணக்கில் வசூல் வேட்டை நடத்தி யுள்ளனர். ஆனால், தற்போது கடன்  வழங்காமல் நிறுவனம் பூட்டப் பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட தொகை அதிகம் என்பதால் காவல்  நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்து,  மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் தருமாறு கூறு கின்றனர். ஆனால், மாவட்ட  கண்காணிப்பாளர் அலுவல கத்தில் உள்ளவர்கள், காவல் நிலை யத்திலேயே புகார் தருமாறு கூறி, தங்களை அலைக்கழிக்கின்றனர். எனவே, கடன் வழங்காமல் பணத்தை வசூல் செய்து விட்டு  ஏமாற்றிய நிதி நிறுவன உரிமை யாளர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பணத்தை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என வலியு றுத்தினர். இதேபோன்று, அன்னூரிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த  என்கேபி நிதிநிறுவனத்தை நம்பி  ஏமாந்து பணத்தை இழந்துள்ளனர்.  இதனையடுத்து, பாதிக்கப் பட்டவர்கள் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதிமணி, அன்னூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மணி கண்டன் தலைமையில் அன்னூர்  காவல்நிலையத்தில் திரண்டு  புகார் அளித்தனர். அவிநாசி யிலும் இதுபோன்று நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப்பட் டுள்ளனர்.  தமிழகம் முழுவம் இந்நிறுவ னத்தை நம்பி லட்சக்கணக்கான ரூபாயை அப்பாவி பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளதால், தமிழக  அரசு தனிக்கவனம் எடுத்து  சம்பந்தப்பட்ட போலி நிதிநிறுவ னத்தின் உரிமையாளர்களை கைது  செய்து, அவர்களின் சொத்துக் களை பறிமுதல் செய்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்  என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.