கோவை, ஜன. 14- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநா ளன்று பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வை அறி வித்த எஸ்பிஐ வங்கி மற்றும் ஒன்றிய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து கோவை யில் எஸ்பிஐ வங்கியை முற்போக்கு அமைப் பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் என எஸ்பிஐ வங்கி அறி வித்தது. இத்தேர்வை எழுத தமிழகத்தில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வு அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் விடுமு றையை கணக்கில் எடுத்துக்கொண்டே தேர்வு தேதியை அறிவிப்பது நடைமுறை யாக இதுவரையில் இருந்து வருகிறது. இந்நி லையில், எஸ்பிஐ வங்கி இத்தேர்வை தமிழர் களின் பன்பாட்டு திருவிழாவான பொங்கல் நாளில் ஜனவரி 15 ஆம்தேதி எழுத்து தேர்வை அறிவித்தது. இது தமிழ்மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
தொடர்ந்து ஒன்றிய அரசு தமி ழர் விரோத போக்குடனே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிற நிலையில், எஸ் பிஐ வங்கியின் தேர்வு தேதி, மேலும் ஆத்தி ரத்திற்குள்ளாக்கியது. இந்த அறிவிப்பு வந்த உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலை யீடு செய்து, வங்கித்தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து, கடிதமும் எழுதினார். இதேபோன்று இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், வங்கி ஊழியர் சங்கங்கள், திமுகவின் தமி ழச்சி தங்கபாண்டியன் எம்பி., ஆகியோர் தமி ழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை யாக உள்ள பொங்கல் நாளில் இத்தேர்வை நடத்தக்கூடாது என மாற்று தேதியில் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்த னர். ஆனால், இதுகுறித்த எந்த புரிதலும் இல் லாத எஸ்பிஐ வங்கி தேர்வுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டது. இதனையடுத்து, வெள்ளியன்று தலைநகர் சென்னையில் எஸ்பிஐ வங்கியின் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியி னர் சு.வெங்கடேசன் எம்பி., தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, எஸ்பிஐ நிர்வாகம் சமா தானம் பேச அழைத்தது. உள்ளே சென்ற சு.வெங்கடேசன் எம்பி., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர், மாற்று தேதி அறிவிக்காமல் இங்கிருந்து நகரமாட்டோம் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி., தமிழச்சி தங்கபாண்டி யன் எம்பி., மற்றும் செல்வக்குமார் எம்பி., ஆகியோர் களத்திற்கு நேரிடியாக வந்து போராட்டத்தில் இனைந்தனர்.
சுமார் 8 மணி நேரம் போராட்டம் நடந்த பின்னரும் தமிழர்க ளின் உணர்வுக்கு மதிப்பளிக்காத நிலையி லேயே ஒன்றிய அரசும், எஸ்பிஐ நிர்வாகமும் இருந்தது. ஒன்றிய அரசு மற்றும் எஸ்பிஐ வங்கி நிர் வாகத்தின் தமிழர் விரோத போக்கை கண் டித்து தமிழகம் முழுவதும் கண்டன குரல் எழுந்தது. இதன்ஒருபகுதியாக, கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியை மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்க ரிய அமைப்பினர் முற்றுகையிட்டு பேராட்டத் தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்பநாபன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், விசிக மாநகர செயலாளர் குரு, திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணியின் மலரவன், தமிழ்பு லிகள் இளவேனில், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, தமுஎகச மாவட்ட செயலாளர் அ. கரீம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று ஒன் றிய அரசு மற்றும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நள்ளி ரவில் நடைபெற்ற இப்போராட்டத்தால், அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.