கோவை, நவ.11- கோவை மாநகட்சிக்குட்பட்ட, சரவணம்பட்டி-காளப்பட்டி சாலை, எஸ்.எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில், திங்க ளன்று “மக்களைத்தேடி மாநகராட்சி” சிறப்பு முகாம் நடை பெற்றது. கோவை மாநகராட்சியின் சேவைகளை பொதுமக்கள் விரைவாக பெறும் வகையில் சிறப்பு முகாம் திங்களன்று நடை பெற்றது. இம்முகாமிற்கு, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவ குரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் பிரிவின் சார்பில் சொத்துவரி, காலியிட பெயர் மாற்றம், காலியிட வரி விதிப்பு, வரி குறித்து அனைத்து வித திருத்தங்கள், வரி புத்தக விநியோகம், புதிய கட்டிட வரி விதிப்பு. பொறியியல் பிரிவின் சார்பில் புதிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் தொடர்பான புகார்கள், தெரு விளக்கு அமைத்தல், சாலை வசதி, மாந கராட்சி பள்ளிகள் பராமரிப்பு, பொது சுகாதாரப் பிரிவின் சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குதல் மற்றும் திருத்தம் செய்தல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட மாநக ராட்சியின் அனைத்து வகையான சேவைகள் தொடர்பான அனைத்து மனுக்களும் பொதுமக்களிடமிருந்து பெறப் பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகளும் வழங்கப்பட்டது. இதில், வடக்கு மண்டலத் தலைவர் வே.கதிர்வேல், மாந கர தலைமைப்பொறியாளர் (பொ) முருகேசன, நகர்நல அலு வலர் மரு.ஏ.மோகன, உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமனற் உறுப்பினர்கள், உதவி செயற்பொறியாளர் எழில் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.