districts

img

ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

சேலம், அக்.12- ஊதிய உயர்வு வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திரு மணிமுத்தாற்றில் இறங்கி  ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகராட்சியில் 700க்கும் மேற் பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வருகின்றனர். இந்நி லையில், பிற மாநகராட்சியில் வழங்குவது போல் தினக்கூலி வழங்க வேண்டும். பணி  நிரந்தரம் செய்ய வேண்டும். வார விடுமுறை, ஆயுள் காப்பீடு, விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண் டும். தூய்மைப் பணியாளர்களின் விருப்பத் துக்கு மாறாக அதிகாரிகள் தன்னிச்சையாக செய்த பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நி லையில், 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியா ளர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றுக்கு வந்தனர். இதன் பின் அவர்கள் அங்கிருந்த சிறிய துளை வழியாக உள்ளே நுழைந்து கயிறு மூலம் திருமணிமுத்தாற்றுக்குள் இறங்கினர். பின் னர் முழங்கால் அளவுக்கு செல்லும் தண்ணீ ரில் நின்று கொண்டு திடீரென ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகர காவல் துறையினர் விரைந்து சென்று போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் போலீசாரிடம், ஆட்சியர் அல்லது மாநக ராட்சி ஆணையாளர் ஆகியோர் வந்து எங்க ளது கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர் பாக உறுதியளிக்க வேண்டும், என்றனர். இத னால் அவர்களது போராட்டம் மதியத்துக்கு பிறகும் தொடர்ந்து நடைபெற்றது. இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறு கையில், சேலம் மாநகராட்சியில் தற்போது  தூய்மைப் பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப் பட்டுள்ளது. தூய்மைப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் எங்க ளுக்கு சம்பளம் நிர்ணயிப்பதில் பல்வேறு குளறுபடி நடக்கிறது. மாதந்தோறும் பிடித் தம் போக ரூ.11 ஆயிரத்து 600 வரை கிடைக் கும். ஆனால், தற்போது ரூ.9 ஆயிரத்து 700 மட்டுமே கொடுக்கின்றனர். எங்களுக்கு குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.700 கொடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், என்றனர்.