கோவை, அக். 25- கூலி உயர்வு கேட்டு ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் கோவை மாநக ரில் குப்பைகள் தேங்கிக்கிடக் கின்றன. அரசு ஒதுக்கீடு செய்த கூலி 721 ரூபாய் வழங்க கோரி கோவை மாந கராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வஉசி மைதானத் தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 6 ஆம் நாளான புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணி யாளர்கள் இதில் பங்கேற்று கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை யடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண் டிகை தினங்களில் மாநகரில் பல் வேறு இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் தேக்க மடைந்துள்ளன. இந்நிலையில், நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையை தொடர்ந்து, போராட் டம் நிறைவுபெற்றது. சேலம் ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை தினத்தன்று தனியார் அலுவ லகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடு களில் இவ்விழாவை கொண்டாடு வது வழக்கம். இதற்காக ஒரு நாளைக்கு முன்பே மாநகர் பகுதிக ளில் வாழை மரங்கள், தேங்காய், பூ, பழம் ஆகியவை விற்பனையாகும். இந்தாண்டு திங்கள் மற்றும் செவ் வாய்க்கிழமைகளில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட மாநகர் பகுதி முழுவதும் பூஜை பொருட் கள் குவிக்கப்பட்டன. இதை பொது மக்கள் வாங்கிச்சென்றனர். செவ் வாய்பேட்டை, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாந கர் பகுதி முழுவதும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற் றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநக ராட்சி அலுவலர்கள் கூறுகையில், மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் ஆயுதபூஜையையொட்டி ஏராள மான குப்பைகள் குவிந்தன. இது வரை வாகனங்கள் மூலம் 1,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டு அவை வாகனங்களில் எடுத்து செட்டிச் சாவடியில் உள்ள குப்பை கிடங் கில் போடப்பட்டுள்ளன, என்றனர். தருமபுரி இதேபோன்று தருமபுரி நகரில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பூசணிக் காய், வாழை மரங்களை, செவ்வா யன்று மாலை வரை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள ஆயிரக் கணக்கான வாழை மரங்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, பாரதிபுரம், நெசவாளர் காலனி, 4 ரோடு, பெரியார் மன்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மேற்கொண் டது. 33 வார்டுகளில் வியாழனன்று ஒருநாள் மட்டும் 60 டன் குப்பைக ளுக்கு மேல் சேகரித்து, நகராட்சி யில் உள்ள உரக்கடங்கில் சேர்த்த தாக நகராட்சி நிர்வாகம் தெரிவித் துள்ளது.