அவிநாசி,செப்.1- திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணியாளர்கள் தனி யார் மையம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் தனியார்மய மாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிஐடியு சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியாளர்களும், 30-க்கும் மேற் பட்டோர் கொசு ஒழிப்பு பணியாளர்களும் பணி செய்து வரு கின்றனர். இதில் 50 வயதுக்கு மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்களையும்36 பேரையும், கொசு ஒழிப்பு பணியாளர் களையும் 19 பேரையும் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்துள்ளனர். இதனைக் கண்டித்து சிஐடியு சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், அதிகாலை முதல் வேலையை புறக்கணித்து, திருமுருகன்பூண்டி நக ராட்சி அலுவலகம் முன்பு உணவு சமைத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த் தைக்கு அழைக்காத காரணத்தால் மதியம் முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரி திரு முருகன் பூண்டி நகராட்சி ஆணையர், ஆகியோர் நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணி, சிஐடியு நிர்வாகி பாலசுப்பிர மணியம், உள்ளிட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணியில் தொடர்வதும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் இரண்டு நாட்கள் அவகாசத் திற்குள், பேசி முடிவெடிப்பதாகவும் கூறியதை தொடர்ந்து தொழிலாளிகளிடம் சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக தொழிலாளிகள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.