கோவை, மார்ச் 23- மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக் கப்பட்ட ஊதியத்தை வழங்க வலியு றுத்தி, கோவை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் கள் பணி புறக்கணிப்பு போராட்டத் தில் வியாழனன்று ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.648 ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட நிலை யில் தற்போது வரை ரூ412 மட்டுமே கோவை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. அதேபோல் பேரூ ராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்க ளுக்கு ரூ.529 நிர்ணயிக்கப்பட்ட நிலை யில் ரூ.475 மட்டுமே வழங்கப்படு கிறது. எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதி யத்தை வழங்க வேண்டும். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோவை மாந கராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப் பந்த தூய்மை பணியாளர்கள் வியா ழனன்று பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிகளைப் புறக் கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற் கொண்டனர். முன்னதாக, இப்போராட்டத்தில், ஏஐடியுசி ஜீவா முனிசிபல் சுகாதார பணியாளர் சங்க செயலாளர் என்.செல்வராஜ், சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தின் பொதுச்செயலாளர் கே.ரத்தின குமார், தமிழ்நாடு அண்ணல் அம்பேத் கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர் சங்கத்தின் தமிழ்நாடு செல் வம், கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச்செயலாளர் ஆர்.பாலகிருஷ் ணன், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் வி. ஜோதி, கோவை மாவட்ட அண்ணா சுகாதார பணியாளர் சங்கத்தின் ஹரி புரம் ரவி உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள் போராட்டத்தினை முன் னின்று வழிநடத்தினர். இப்போராட்டத்தையடுத்து மாந கராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளதாக கூறப்படு கிறது. பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு ஏற்படும் வரையில் போராட்டம் தொடரும் என தலைவர்கள் தெரி வித்தனர்.