districts

img

சங்ககிரி: அனுமதியின்றி 2 ஆயிரம் டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுப்பு

சேலம், அக்.11- சங்ககிரி அருகே அனுமதியின்றி 2 ஆயி ரத்து 281 டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டி  எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாளக்குட் டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், அதேபகுதியில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் சுண்ணாம்பு கல் வெட்டி எடுக்க கடந்த 1996 ஆம் ஆண்டு செப்.20 ஆம் தேதி முதல் 2016 ஆம் ஆண்டு செப்.19 ஆம் தேதியன்று வரை 20 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமம் பெற்று இருந்தார். இந்நிலையில், வெங்கடாசலம் தொடர்ந்து அனுமதியின்றி சுண்ணாம்பு கற் கள் வெட்டி எடுப்பதாக சென்னை புவியி யல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த ஜூலை 7 ஆம் தேதியன்று சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் நேரில் சென்று தணிக்கை மேற்கொண்டார். அதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத் தகை பரப்பிற்கு உள்ளேயும் மற்றும் வெளி யேயும் சுரங்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள் ளது தெரியவந்தது. இதையடுத்து வெட்டி  எடுக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் கனிமத் தினை அளவீடும் பணி மேற்கொள்ளப்பட் டது. அதில் உரிய நடைசீட்டு அனுமதியின்றி குத்தகை பரப்பிற்குள் 816.04 டன் சுண்ணாம்பு கற்களும் மற்றும் குத்தகை பரப்பிற்கு வெளியே 1,465.62 டன் என மொத்தம் 2281.66 டன் சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுக்கப் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரங்க குத்தகை அனுமதி யின்றி சுண்ணாம்பு கற்கள் வெட்டி எடுத்த மைக்கும், அரசுக்கு ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக வும் வெங்கடாசலம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வட்டாட்சியர் செல்வகுமார் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் வெங்கடா ஜலத்தின் மீது சங்ககிரி ஆய்வாளர் தேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஆகி யோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.