districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சந்தன மரம் வெட்டி கடத்தல்

கோவை, ஜூன் 11- ஆட்சியர் முகாம் அலுவல கம் உள்ளிட்ட முக்கிய பிரமு கர்கள் வசிக்கும் பந்தய  சாலைப் பகுதியில், சந்தன  மரம்வெட்டி கடத்திய சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

கோவை மாவட்டம், மாநகராட்சிக்கு சொந்தமான நடை பாதையில் சிறுவர்களுக்கான பூங்கா உள்ளது. இந்த வளா கத்தின் அருகே வளர்ந்து இருந்த சந்தன மரத்தை அடை யாளம் தெரியாத நபர் வெட்டி கடத்தி உள்ளார். 

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து, சம் பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி களை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வியாபாரியிடம் பணம் பறித்த நபர்கள் கைது

கோவை, ஜுன் 11- கோவை மாவட்டம், பீளமேடு பாலாஜி நகரை சேர்ந்த வர் மாலைராஜ் (42). தேங்காய் வியாபாரி. இவர் இரவு விமான  நிலையம் பின்புறம் பிருந்தாவன் சாலையில் நின்று செல்போ னில் பேசி கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த வாலி பர் ஒருவர் மாலைராஜிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க  மறுத்ததால் அந்த வாலிபர் கத்தி முனையில் மாலை ராஜை  மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1500 ஐ பறித்து தப்பி சென் றார். 

இது குறித்து மாலை ராஜ் பீளமேடு காவல் நிலையத் தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த  நபர் சத்தியமங்கலம் புளியம்பட்டியை சேர்ந்த வீட்டு தரகர்  ராஜ்குமார் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை  கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்த னர். 

இதே போல், கோவை, உடையாம்பாளையம் அசோக்  தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (37) பெயிண்டர். இவர் வேலை  முடிந்து தனது நண்பர் ஒருவருடன் நடந்து ராமநாதபுரம் ஏரி மேடு ஜங்சன் அருகே சென்ற போது, வழிமறித்த வாலிபர்  ஒருவர் ஆனந்தை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த  ரூ. 300 ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில்,  ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணம் பறித்த  புலியகுளத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) குண்டு மணி கண்டனை (32) போலீசார் கைது செய்தனர்.

ஆகாய தாமரைகள் அகற்றம் - ஆட்சியர் ஆய்வு

கோவை, ஜூன் 11- குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாய  தாமரைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றப் பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

கோவை மாநகரட்சி தெற்கு மண்டலத் திற்கு உட்பட்ட குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள  ஆகாய தாமரைகள் நவீன இயந்திரம் மூலம்  அகற்றப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமாா் பாடி  மற்றும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ஆகியோர் திங்களன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கூறியதா வது, மழைநீரை குளங்களில் முழுமையாக சேமிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள செல்வம்பதி குளம், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள் ளிட்ட குளங்களில் படர்ந்துள்ள ஆகாய தாம ரைகள் முற்றிலும் அகற்றப்படும் என்றார்.

மனைவி, மகளை தாக்கிய கணவர் கைது 

கோவை, ஜூன் 11- மனைவி மற்றும் மகளை தாக்கியவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், சொக்கம்புதூர் அன்னை இந் திரா நகரை சேர்ந்தவர் சின்ன ராஜ்(43). குடிப் பழக்கம் உடைய இவர் அடிக்கடி போதையில் தனது மனைவி  லதாவிடம்(40) தகராறு செய்து வந்ததாக கூறப்ப டுகிறது. இதேபோன்று செவ் வாயன்றும் தகராறு ஏற்பட் டது.

இதில், ஆத்திரம் அடைந்த சின்னராஜ் தகாத  வார்த்தைகள் பேசி லதாவை  தாக்கினார். இதனை தட்டி கேட்ட அவரது மகளையும் தாக்கியுள்ளார்.  இது குறித்து லதா செல்வ புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னராஜை கைது செய்து அவரை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைத்தனர்.