திருப்பூர், ஜன.1- ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக் கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக திங்களன்று புத்தம் புது பூமி வேண்டும் என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் மும்மத அடையாளத்துடன் தூய்மைப் பணி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், குப்பைகளை ஆங்காங்கே போட கூடாது, குப் பைத் தொட்டியில் போட வேண்டும், மரங்களை அதிகமாக நடவு செய்து அவற்றை பராமரிக்க வேண்டும், ஒவ்வொரு வரும் இந்தாண்டு 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று பேசினார். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், செர்லின், தினேஷ் கண்ணன், காமராஜ் ஆகியோர் தலைமையில் இந்து, கிரிஸ்துவர், முஸ்லிம் அடையாளங்களுடன் தூய்மைப் பணி யில் ஈடுபட்டனர், பிறகு தேவையற்ற மரக்கிளைகளை கவாத் செய்தும், புத்தாண்டு தின கேக் வெட்டியும் நிகழ்வு நடை பெற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.