districts

img

சனாதன ஒழிப்பு மாநாடு விளக்க கூட்டம்

உடுமலை, செப்.23- உடுமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு விளக்க  கூட்டம் சனியன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் மடத்துக்குளம் கிளையின் ஐந்தாம் இலக்கிய அமர்வு  கிளைச் செயலாளர் ராஜரத்தினம் தலைமையில் சனிக்கி ழமை  சூர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், சங்கத்தின்  மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.  ஈல்வரன், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கலந்து  கொண்டு சனாதன ஒழிப்பு மாநாடு  உண்மையும், திரிப்பும்  என்ற தலைப்பில் மாநாட்டின் உண்மை நிலையை விவரி வாக போசினார்கள்.  இதைத்தொடர்ந்து மாவட்ட செயற்குழு  உறுப்பினர் தோழன்ராஜா, துணைத்தலைவர் தா.தெய் வானை ஆகியோர் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு துவக்கம்  குறித்து பேசினார்கள். பூங்கொடி பாலமுருகன் எழுதிய மந்திர  கோட் என்னும் சிறார் கதைகளை முதுகலை மாணவி ரா. பஷீரா  நூல் அறிமுகம் செய்து பேசினார். கவிஞர்கள் பஞ்ச லிங்கம், வீதம்பட்டி மாரிமுத்து கவிதைகள் வாசித்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவி ராம்கோடி  ராகவிலின் நடன நிகழ்ச்சியும், லட்சுமியின் பாடல்  நிகழ்ச்சி  நடைபெற்றது. முடிவில், பின் வானவில் இதழின் வடிவமைப் பாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.