districts

img

தொழிற்சங்க தலைவர்களின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.19- சாம்சங் நிறுவனத்தின் தொழி லாளர் விரோதப்போக்கை எதிர்த்து,  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கத் தலைவர்களின் கைதை கண்டித்து, போக்குவரத்து மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரம் பகுதியிலுள்ள சாம் சங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள், தங்களின் உரிமைக ளுக்காக தொழிற்சங்கத்தை உரு வாக்கியுள்ளனர். இதனை ஏற்க  மறுத்த அந்நிறுவனம், தொழிலா ளர்களை பழிவாங்கும் நடவடிக்கை யில் இறங்கியுள்ளது. இதனை கண் டித்து கடந்த 10 நாட்களாக சிஐடியு  தலைமையின் கீழ் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப் பிரச்சனையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு  மாநிலத் தலைவர் அ.சவுந்தரரா சன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமா றன் உள்ளிட்ட தலைவர்களை காவல் துறையினர் அடாவடியாக கைது செய்துள்ளனர். மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களையும் காவல் துறையினர் கைது செய் துள்ளனர். இதனை கண்டித்தும், சாம் சங் நிறுவனத்தின் தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக, சேலம் புதிய பேருந்து நிலையம், மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில நிர்வாகி இ

கோவை

சாம்சங் நிறுவன தொழிலாளர் களுக்கு ஆதரவாக கோவையில் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து தலைமைய கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சம்மேளன துணை பொதுச் செயலாளர் கனகராஜ்,  மாவட்டச் செயலாளர் பரமசிவம், பொருளா ளர் கோபால் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு மின்ஊழியர் மத்திய அமைப் பின் மாநில துணைத்தலைவர் பி. ஜீவா தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், கோட்டச் செயலாளர்கள் கே.ஜெகநாதன், ஏ. கோவிந்தன், கோட்டத் தலைவர் எம்.ஆறுமுகம், சாலை போக்குவ ரத்து சங்க மாவட்டத் தலைவர் கே. பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலை வர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மண்டலச் செய லாளர் சி.ஜோதிமணி, கிளைச் செய லாளர் பி.ஸ்ரீதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.