கோவை, ஜன. 18- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் 24 இடங்களில் நடை பெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். இதில், பீள மேடு, மேட்டுபாளையம், காரமடை உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் நூற்றுக்கணக்கா னோருக்கு உணவு விருந்து அளித்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர். மேலும், 422 வீடுகளில் மத நல்லிணக் கத்தை வலியுறுத்தி கோலமும், அதில் மத நல்லிணக்க ஒளி பரவட்டும் என்கிற முழக்கத்துடன் தீபம் ஏற்றி கொண்டாடி னர். இந்நிகழ்வுகளில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதிமணி, மாவட்டப் பொருளாளர் உஷா, மாநிலக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் அமுதா, தங்கமணி, சாமுண்டீஸ்வரி, ஜீவாமணி, மெக பூநிஷா, சாந்தா, ரேவதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடை கமிட்டி உறுப்பி னர்கள், கிளை உறுப்பினர்கள் திராள னோர் பங்கேற்றனர்.