districts

img

பஞ்சாப் விவசாயி - யின் அஸ்திக்கு வீரவணக்கம்

கோவை, ஏப்.2- காவல் துறையால் சுட்டுக் கொல் லப்பட்ட பஞ்சாப் இளம் விவசாயி யின் அஸ்தி கோவைக்கு புதன்கி ழமை விமானம் மூலம் கொண்டு வரப் பட்டது. கோவையின் பல்வேறு பகுதி களில் நடைபெறும் தேர்தல் பிரசாரங் களில் அஞ்சலிக்கு பிறகு இந்த அஸ்தி,  கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.  வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், பயிர்க்  கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி பஞ்சாப் மாநில  விவசாயிகள் தில்லியை முற்றுகையி டும் போராட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தனர்.அதன்படி தில்லியை நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகளை ஹரியானா மாநில எல்லையில் அம்மாநில அரசு  தடுத்து நிறுத்தியது. மேலும், ஹரியா னாவுக்குள் நுழைய முயன்ற விவசா யிகள் மீது துப்பாக்கிச் சூடு, கண்ணீர்  புகைக் குண்டு தாக்குதலில் ஹரியானா  போலீஸார் ஈடுபட்டனர். இந்த தாக்குத லில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங் (21), குண்டு காயமடைந்து உயிரிழந்தார். உயிரிழந்த விவசாயியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், ஹரி யானா பாஜக அரசு, ஒன்றிய பாஜக அர சைக் கண்டிக்கும் விதமாக சுப்கரன்  சிங்கின் அஸ்தியை கலச யாத்திரை நடத்தி, சம்யுக்த விவசாய கூட்டமைப் பின் சார்பில் நாடு முழுவதும் எடுத்துச்  செல்லப்பட்டது. 21 கலசங்களில் அவரது அஸ்தி சேகரிக்கப்பட்டு பல்வேறு மாநில விவசாயிகளின் அஞ் சலிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள் ளது.  அதன்படி தமிழ்நாட்டுக்கான அஸ்தி கோவைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் தந்தை பெரி யார் திராவிடர் கழகத்தின் பொதுச் செய லர் கு.ராமகிருட்டிணன் தலைமை யில், தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி  சார்பற்றது), நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பழங்குடி மக்கள்  பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயி கள் சங்கங்களின் நிர்வாகிகள், கிஸன்  மஸ்தூர் மோர்ச்சாவின் கேரள மாநில நிர்வாகி பி.டி.ஜான் உள்ளிட்டோர் மலர்  தூவி மரியாதை செலுத்தினர்.