சேலம், நவ 22- சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் திடீர் தீ விபத்து ஏற் பட்டதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சேலம் அரசு மருத்துவமனை யில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இதன் முதல் தளத் தில் அமைந்துள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அறையில், ஏசி யில் மின்கசிவு ஏற்பட்டதன் காரண மாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. உடனடியாக அங்கு சிகிச்சை பெற்று வந்த உள் நோயா ளிகள் மற்றும் மருத்துவர்கள், செவி லியர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அலறியடித்தபடி வெளியேறினர். இதையடுத்து செவ்வாய்பேட்டை நிலைய தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற் படவில்லை. இதனையடுத்து, மருத் துவமனை வளாகத்தில் தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மருத் துவ குழுவினர் நோயாளிகளை பாது காப்பாக மாற்று அறைக்கு இட மாற்றம் செய்தனர். இதுகுறித்து சேலம் அரசு மருத் துவமனையின் முதல்வர் மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பகுதியில் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய கரும்புகை ஏற்பட்டது. கரும்புகையின் அழுத் தம் காரணமாக அருகில் இருந்த கண்ணாடிகள் உடைந்து உள்ளது. முதற்கட்டமாக 15 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள அறைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத் தில் யாருக்கும் எந்த காயமும் ஏற் படவில்லை. தீயணைப்பு படையி னர், மருத்துவ குழுவினர், காவல் துறையினர் மீட்புப்பணிகளில் ஈடு பட்டதாக தெரிவித்தார். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற் பட்ட தகவலறிந்து, நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் நேரு, ஆட்சி யர் செ.கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சென்னை மருத்துவ கல்வி இயக்கு நர் சங்குமணி நேரில் ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து ஆட்சியர் கூறுகை யில், ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளது. முதல் தளத் தில் மற்றும் அருகில் இருந்த 65க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பாக அப்பு றப்படுத்தப்பட்டனர். யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. கரும் புகையின் காரணமாக நோயாளி கள் மற்றும் மருத்துவர்களுக்கு மூச் சுத்திணறல் இருந்தது. பெரிய அள வில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக அப் புறப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரி வித்தார்.