சேலம், பிப்.2- சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் புதனன்று வேட்புமனு தாக் கல் செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச் சேரி பேரூராட்சி 3 ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.பழனி புதனன்று மேச்சேரி சிறப்புநிலை பேரூ ராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக் கல் செய்தார். இந்நிகழ்வின்போது, திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாச பெருமாள், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, ஜி.மணிமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங் கேற்றனர். வாழப்பாடி தாலுகா அயோத்தியாபட்ட ணம் பேரூராட்சி மார்க்சிஸ்ட் கட்சி வேட் பாளராக 11 ஆவது வார்டில் போட்டியிடும் பி. கந்தசாமி, 13 ஆவது வார்டில் போட்டியிடும் பொற்செல்வி ஆகியோர் வேட்புமனு தாக் கல் செய்தனர். இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் மேவை. சண்முகராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் என். பிரவீன்குமார், வாழப்பாடி தாலுகா செயலாளர் வீ.தங்கவேலு, திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நகர செய லாளர் செல்வராஜ் என்கிற பாபு, சிபிஐ செய லாளர் ராஜா, வாலிபர் சங்க செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டு கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் பங் கேற்றனர்.