districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலம் சட்டமன்ற உறுப்பினர் போராட்டம்

சேலம், நவ.8- உழவர் சந்தையிலிருந்து உழவர்களை வெளியேற்றி, வெளி வியாபாரிகளை அனுமதிக்கும் மாவட்ட வேளாண்மை  துணை இயக்குநரை கண்டித்து சேலம் சட்டமன்ற உறுப்பி னர் அருள் போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், சூரமங்கலம் உழவர் சந்தையில் விவசாயிகளை அனுமதிக்காமல், இடைத்தரகர்களை அனும திப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, சேலம்  மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் அவருக்கு  உதவியாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்  என வலியுறுத்தி சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், உழ வர் சந்தை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கோவையில் கடன் வாங்கி மோசடி

கோவை, நவ. 8- கோவையில் தொழிலை விரிவு படுத்து வதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ. 53 லட்சம்  கடன்பெற்று மோசடி செய்ததாக தம்பதி யினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். கோவை அடுத்த சின்ன தடாகம் மாரி யம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுமார்(53). சொந்த தொழில் செய்து வரு கிறார். இவர் கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ரகுநாத். ஸ்டேசனரி கடை நடத்தி வருகிறார். எனக்கு  நட்பு ரீதியாக பழக்கமான அவர் கடந்த 2016ம்  ஆண்டு தனது தொழிலை விரிவு படுத்த வேண்டும் எனவும், வங்கி கடனை அடைக்க  வேண்டும் எனவும் பணம் கேட்டார். நம்பிக் கையின் பேரில், அவரிடம் ரூ. 53 லட்சம் கொடுத்தேன். ஆனால் அதற்கு அவர் சில  மாதங்கள் வரை வட்டி கொடுத்தார். ஆனால்  அதன்பின்பு வட்டியும், அசல் தொகை யையும் திருப்பி செலுத்தாமல் காலம் கடத்தி  வந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, தனது வீட்டை விற்று கடனை  அடைத்து விடுவதாக தெரிவித்தார். ஆனால்  பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுக் கவில்லை. மேலும் ரகுநாத் வீட்டை விற்க அவ ரது மனைவி சுசித்ராவிடம் பவர் பத்திரம் எழுதி கொடுத்து விட்டு வெளிநாடு செல்ல திட்டமிடுவதாக தெரிகிறது. எனவே ரூ. 53  லட்சம் மோசடி செய்த ரகுநாத் மற்றும் அவரது  மனைவி சுசித்ரா மீது நடவடிக்கை எடுத்து  எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. புகாரின் பேரில், போலீசார் ஏமாற்று தல், நம்பிக்கை மோசடி ஆகிய இரு பிரிவுக ளின் கீழ் ரகுநாத், அவரது மனைவி சுசித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

கடையில் திருட்டு
கோவை, நவ. 8- கோவை கரும்புக்கடை சவுகார் நகரை சேர்ந்தவர் அப்துல் முத்தலீப்(34). இவர்  அவிநாசி ரோடு பாப்பநாயக் கன்பாளையத்தில் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடை யில் மர்ம நபர்கள் சிலர் இர வில் கைவரிசையில் ஈடுபட் டுள்ளனர். காலையில் அப் துல் முத்தலீப் வந்து பார்த்த  போது கடையில் இருந்த  ரூ.1000 மற்றும் துணிகள்  திருடுபோனது தெரியவந் தது. இவற்றின் மதிப்பு ரூ.7  ஆயிரம் ஆகும். இது குறித்து  அப்துல் முத்தலீப் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புற்றுநோய் விழிப்புணர்வு

திருப்பூர், நவ.8- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேசிய புற்றுநோய் விழிப் புணர்வு தினத்தை முன்னிட்டு  திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-2 சாா்பில்  புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல் லூரி முதல்வர் வ.கிருஷ் ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற மாணவர்கள் புற்று நோய் விழிப்புணர்வு குறி யீட்டு ரிப்பன் அணிந்து  விழிப் புணர்வு ஏற்படுத்தினர். 

அமராவதி ஆற்றங்கரையில் தென்படும் முதலைகளால் மக்கள் அச்சம்

திருப்பூர், நவ.8 - அமராவதி ஆற்றங்கரையில் முதலைகள் நடமாட்டம் அதி கரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து முதலைகளை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது.  இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில்,  அமராவதி ஆற்றில் முதலைகள் உலா வந்த வண்ணம் உள் ளன. இதனால் ஆற்றுநீரை பயன்படுத்தி வரும் பொதுமக் கள், கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள் ளது என்று கரையோர கிராமங்களில் வாழும் மக்கள் மத்தியில்  அச்சம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக கல்லாபுரம்  அருகே அமராவதி ஆற்றங்கறை பகுதியில் முதலை தென்படு வதால் ஆற்றுக்கு வருகைதரும் மக்கள் அச்சம் அடைந்துள் ளனர். மேலும் கரையோர கிராமங்களில் முதலைகள் உலா  வந்து பிடிபட்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுவரையிலும் முத லைகளால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு எவ்வித  ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் முதலைகள் உலா வரு வதை அலட்சியம் செய்யக்கூடாது. அமராவதி ஆற்றில் உலா  வரும் முதலைகளைப் பிடித்து உரிய முறையில் பராமரிப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள்  கூறுகின்றனர்.

மொட்டை அடித்து ராகிங்: 7 மாணவர்கள் கைது

கோவை, நவ.8- கோவையில் மது குடிப்பதற்காக ஜூனியர் மாணவரை மொட்டை அடித்து, தாக்கி ராகிங் செய்த 7 கல் லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.  கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல் லூரியில் பயிலும் முதுநிலை மாண வர்கள், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூரைச் சேர்ந்த 18 வயது ஜூனியர் மாணவரை ராக் கிங் செய்துள்ளனர். திங்களன்று இரவு, தனது விடுதி அறையில் தங்கியிருந்த ஜூனியர் மாணவரை, சீனியர் மாணவர் கள் தங்கி இருக்கும் அறைக்கு அழைத் துச் சென்று, ஆபாசமாக திட்டி தாக்கி யதுடன்  மொட்டை அடித்தும், துன்பு றுத்தியுள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப் பட்ட மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முதுநிலை மாணவர்கள், ஏழு பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மது குடிக்கவே பணம் கேட்டு ராக்கிங் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராகிங்கில் ஈடுபட்ட ஏழு  மாணவர்களையும் போலீசார் கைது செய்து, ஆயுதங்களால் காயம் ஏற்ப டுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த னர்.  இதுகுறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் ஏராளமான கல்லூரி இருக் கிறது. இங்கு ராகிங் என்பது அதிகமாக இல்லை. ஓரிரு சம்பவத்தால் வழக்கு பதியப்பட்டு காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்ற செயல்களால் வழக்கு பதிவு செய்வதன் மூலம், மாணவர்கள் வெளி நாடுகளுக்கு செல்ல முடியாது. அதே போல அரசு வேலை மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் பெற முடி யாது என எச்சரித்தார். மேலும், தமிழ கத்தில் ராக்கிங்க்கு எதிரான சட்டம் கடு மையாக உள்ளது. அதனால் இதில்  யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், மாணவர்கள் கைது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.