districts

மின்சார நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய மாநில அமைச்சர் முன்னிலையில் சைமா கோரிக்கை

திருப்பூர், ஜூன் 24 – கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின்சார நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்,  பீக்ஹவர் பயன்பாடு என உச்ச நேர மின் நுகர் வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை பரிசீ லனை செய்ய வேண்டும் என்று மாநில ஜவு ளித் துறை அமைச்சர் காந்தி முன்னிலை யில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ் வரன் கூறியுள்ளார். கோவையில் கடந்த 22ஆம் தேதி ஜவுளி தொழி்ல்நுட்ப மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் மாநில ஜவுளித்துறை அமைச்சர் காந்தி முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ் வரன் ஜவுளித் தொழில் மேம்பாட்டுக்கு மேற் கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்து கூறி னார்.  குறிப்பாக பஞ்சு, நூல் விலையைத் தீர் மானிப்பதில் விவசாயிகள், வணிகர்கள், ஜின் னர்கள், நூற்பாலைகள், அரசின் கொள்கை, இந்திய பருத்திக் கழகம் என அனைவரின் பங்களிப்பும் உள்ளது. இவற்றை எல்லாம் கடந்து நூல் கொள்முதல் செய்யும்போது நூலின் விலை சீராக இல்லாமல் ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் வணிகம் மிகவும் பாதிப் புக்கு உள்ளாகிறது. எனவே இப்பிரச்சனை யில் பின்னலாடைத் தொழில் பாதிப்பை கண் டறிந்து களைய, நிரந்தரமான கொள்கையை  வகுக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின் சார நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண் டும்.  பீக்ஹவர் ரீடிங் என உச்சநேர மின் பயன் பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை பரிசீலிக்க வேண்டும்.  வங்க தேசத்தில் இந்தியாவில் இருந்து வரி இல்லாமல் மூலப்பொருட்களை பெற்றுக்  கொண்டு, துணி, ஆடைகளை மீண்டும் இந் திய சந்தைக்கு அனுப்புகின்றனர். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போட்டி போட  முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மத்திய  அரசுத் துறைகளுடன் தொடர்பு கொண்டு  நம் நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்க ளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும்  வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டிருக் கிறார்.