districts

பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் போது தங்களின் உயிரை தியாகம் செய்ய துணிந்தவர்கள் செங்கொடி தோழர்களே - கே.பாலகிருஷ்ணன்

உடுமலை, பிப்.16-   பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் போது தங்களின் உயிரையும் தியா கம் செய்ய துணிந்தவர்கள் செங்கொடி  தோழர்களே என மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதி யில் நடைபெறும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாயன்று தேர் தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்ஒரு பகுதியாக, உடுமலை தாலுகா தளி பேரூ ராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு  சேகரித்தார். அதன்பின்னர் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தளி பேருராட்சியில் வேட்பாளராக போட்டி யிடும் நான்குபேரில், இருவர் ஏற்கனவே இத்தொகுதிக்காக பணியாற்றியவர்கள். இவர்கள் கடந்த முறை இப்பகுதியில் பொதுமக்களிடம் ஒரு பைசா கூட பணம் பெறாமல் செய்த வேலைகளை பட்டிய லிட்டு வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால், எதிர் வேட்பாளர்களோ பையில் பணத்தை வைத்துக் கொண்டு வாக்கு சேகரிக்க வருகிறார்கள். தேர்தல் என்பது  வியாபாரம் அல்ல, பணத்தை முதலீடு செய்து மீண்டும் பணத்தை எடுக்க. ஓட்டுக்கு பணம் தருபவர்களை பொதுமக்கள் புறக் கணிக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மடத்துக்குளம், கொமரலிங்கம் மற்றும் சங்கரமநல்லூர் பேரூராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச் சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் நலன் செயல்பாடுகளுக்கு தற்பொழுது வெளிவந்த ஜெய்பீம் திரைப்படமே சிறந்த உதாரணமாக உள்ளது. பொதுமக்களின் நலனுக்காவும், தலித் மற்றும் பழங்குடி யின மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் போதும் செங்கொடி தோழர்கள் தங்களின்  உயிரை தியாகம் செய்ய துணிந்தவர்கள். எனவே, மக்களின் அடிப்படை தேவையாக குடிநீர், சாக்கடை மற்றும் பொது சுகாதா ரம் வசதிகள் கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.  முன்னதாக, தளி மற்றும் கொமர லிங்கம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பி னர் கே. காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர். மதுசூதனண், உண்ணிகிருஷ்ணன், உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல் ஆகி யோர் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முன் னணி நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.