திருப்பூர், நவ. 19 - ஊத்துக்குளி ஒன்றியம் ச.பெரி யபாளையம் நியாயவிலைக் கடையை பழைய இடத்திற்கு மாற் றக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு செய்திருந்த நிலையில், அந்த கடை இடமாற்றம் செய்யப்பட் டது. ஊத்துக்குளி ஒன்றியம் ச.பெரி யபாளையம் நியாய விலைக் கடை (எண்.32டிபி014பிஎன்) பல ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு வசதி யாக ஊத்துக்குளி பிரதான சாலை அருகில் சொந்த கட்டிடத்தில் செயல் படுத்தப்பட்டு வந்தது. இந்த கடை ஏ. ஏ.16 மொரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங் கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையில் 1366 குடும்ப அட்டை கள் உள்ளன. ச.பெரியபாளையம் ஊராட்சி மன்றத்தின் புதிய கட்டடம் கட்ட, நியாய விலை கடையை வேறு இடத் திற்கு தற்காலிகமாக மாறுதல் செய்த னர். அந்த இடத்தில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா வும் நடைபெற்றுவிட்டது. ஆயினும் உறுதியளித்தபடி பழைய கட்டிடத் திற்கு நியாயவிலைக் கடையை மாற் றவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தொடர்பு கொண் டால், கூட்டுறவுத் துறையையும், கூட் டுறவு சங்கத்தில் கேட்டால் வட்ட வழங்கல் துறையையும் மாற்றி, மாற்றி தெரிவித்து காலம் தாழ்த்தி வந்தனர். எனவே உடனடியாக ச.பெரியபா ளையம் நியாயவிலைக் கடையை பழைய ஊராட்சி மன்ற கட்டட அலுவ லகத்தில் செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ச.பெரியபாளையம் கிளை சார்பில் திங்களன்று மாலை பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மொரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செய லாளர் திரெளபதி, ஊத்துக்குளி சரக பொது விநியோக சார்பதிவாளர் துரையரசன் ஆகியோர் நடவடிக்கை எடுத்து திங்கள்கிழமை கடை மாறுதல் செய்யப்படும் என தெரி வித்தனர். அதன்படி திங்களன்று காலை யில் ரேசன் பொருட்களை லாரிகளில் கொண்டு வந்து அங்கு இறக்கி வைத்து, கடை செயல்பட ஏற்பாடு செய்தனர். கோரிக்கையை ஏற்று நியாயவி லைக் கடையை பழைய இடத்திற்கு மாற்றியதற்கு மார்க்சிஸ்ட் கட்சியி னர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித் தனர். மேலும் கடை மாற்றத்தை வலி யுறுத்தி நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் வெற்றி விளக்கக் கூட்டமாக நடத்தப் பட்டது. கிளைச் செயலாளர் ஆ.மேகநாதன் தலைமை வகித்தார். மாதர் சங்க நிர்வாகி லட்சுமி, மாதர் கிளைச் செயலாளர் செல்வி ஆகி யோர் முன்னிலையில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார், தாலுகாச் செயலாளர் கு. சரஸ்வதி ஆகியோர் சிறப்புரையாற் றினர். தாலுகாக்குழு உறுப்பினர் ப. வண்ணக்கொடி உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.அன்பழகன் நன்றி கூறினார்.