districts

img

சிகாகோ தியாகிகள் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு செல்வோம் திருப்பூர் மே தின விழாவில் எஸ்.கண்ணன் பேச்சு

திருப்பூர், மே 1– சிகாகோவில் எட்டு மணி நேர வேலைக்கான வீரஞ்செறிந்த போராட்டத்தையும், தியாகம் செய்த  தலைவர்களையும் பற்றிய வர லாற்றை இளைஞர்களுக்கு தொடர்ந்து கொண்டு செல்ல வேண் டும் என்று சிஐடியு தமிழ் மாநிலத் துணை பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் கூறினார். திருப்பூரில் சிஐடியு, ஏஐடியுசி இணைந்து 137 ஆவது மே தின பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். எனினும் தொடர்ந்து கன மழை பெய்த நிலையில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்தப்பட்டது. முன்னதாக சிஐடியு மாவட்ட தலைமை அலுவலகமான தியாகி பழ னிசாமி நிலையம் முன்பு நடைபெற்ற  மே தின கொடியேற்று விழாவில் சிஐ டியு கொடியை ஏற்றி வைத்த சிஐடியு  துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் உரையாற்றினார். அப் போது அவர் கூறுகையில், மே தின வர லாற்றை இளைஞர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். மே தினம் நடைபெற்ற சிகாகோவில் தொழிலாளர்கள் நினைவுச் சின்னம்  வைக்க அமெரிக்க அரசு அனுமதிக்க வில்லை. மாறாக அந்த போராட் டத்தை ஒடுக்கியபோது உயிரிழந்த காவலர்களுக்கு நினைவுச் சின்னம்  வைத்தது. அதற்கு 80 ஆண்டுக ளுக்குப் பிறகு அமெரிக்க இளைஞர் கள் அந்த நினைவுச் சின்னத்தை தகர்த்தனர். அதுபோல் வரலாற் றைக் கற்பிக்கும்போது பிற்போக் கான நினைவுகள் தகர்க்கப்படும். புதிய மாற்றம் ஏற்படும். இன்று தமி ழக முதல்வர் 65 ஏ சட்டப் பிரிவை கைவிடுவதாக அறிவித்திருப்பது சிஐடியு தமிழக தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய எதிர்ப்புணர்வு தான் காரணம், என்றார்.

திருப்பூர் மட்டுமின்றி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மே  தின கொடியேற்று விழாவை சிஐடியு,  ஏஐடியுசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். வழக்கத்தை விட  இளைஞர்கள், பெண்கள் பங்கேற்பு அதிகளவில் இருந்தது. அவிநாசியில் தமிழர்கள் பாரம்ப ரிய சிலம்பாட்டத்துடன் உழைப்பா ளர் பேரணி திங்களன்று கோலாகல மாக நடைபெற்றது. சிஐடியு, ஏஐடி யுசி சங்கங்கள் சார்பில் இப்பே ரணி நடைபெற்றது. அவிநாசி பயணி யர் விடுதி முன்பு துவங்கி, சேவூர்  சாலை வழியாக, மடத்துப்பாளையம் சாலையில் சென்று அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பேரணி நிறைவடைந்தது. இப்பேரணியில் ஒன்றிய அரசின் மக் கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து ஆவேச முழக்கம் எழுப்பி அணிவகுத்து வந் தனர். இதில் சிஐடியு மாவட்ட செயலா ளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி  மாவட்ட  நிர்வாகி மோகன் மற்றும் இரு சங்கங் களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சிஐடியு  நிர்வாகி சண்முகம் தலைமையில், ஏஐடியுசி ராமசாமி முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந் தது.  பனியன் பொது தொழிலாளர் சங் கம் சார்பில் திருப்பூர் வடக்கு ஒன்றி யத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர் அலுவலக கிளை, புதிய திருப்பூர்,  கருக்கங்காட்டு புதூர், தட்டாங் குட்டை, வள்ளிபுரம், வலசுபாளை யம், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி நடை பெற்றது. 

அதேபோல் கணக்கம்பாளை யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி  நடைபெற்றது. கிளை செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமையில், ஊராட்சி மன்ற உறுப்பினர் உஷா நந் தினி, விவசாய தொழிலாளர் சங்க திருப்பூர் ஒன்றிய தலைவர் பரணி சீனி வாசன், சுந்தரம், வெள்ளிங்கிரி உட் பட திரளானோர் பங்கேற்றனர்.  அனுப்பர்பாளையம் புதூர்  கிளையில் நடைபெற்ற கொடியேற்று  நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் என். விஸ்வநாதன் தலைமை ஏற்றார். கட் சியின் மூத்த தலைவர் ஆர்.நடராஜன்  கொடி ஏற்றி வைத்தார். இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கொடியை பி.  சந்தோஷ் ஏற்றி வைத்தார். இதில் திர ளானோர் பங்கேற்றனர். காங்கேயம் அரசுப் பேருந்து பணி மனை முன்பு சிஐடியு கிளையில் மே  தின கொடியேற்று நிகழ்ச்சி நடை பெற்றது.  செங்கொடியினை கிளை  தலைவர் விஸ்வநாதன் ஏற்றி வைத் தார். சிஐடியு திருப்பூர் மாவட்டக்குழு  உறுப்பினர் திருவேங்கடசாமி சிறப் புரை ஆற்றினார். மத்திய சங்க நிர் வாகி வின்சென்ட் நன்றி கூறினார். அதேபோல் காங்கயம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பில் மே தின விழா மூன்று பகுதிகளில் கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

உடுமலை ஒன்றியத்தில் மே தின கொடியேற்று விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. குரல்குட்டை, கண்ணமநாயக்கனூர், பள்ளபாளை யம், மருள்பட்டி, மருள்பட்டி பகத்சிங்  நகர்,  எலையமுத்தூர் கிழக்கு, எலை யமுத்தூர், செல்வபுரம் ஜல்லிபட்டி,  ஜல்லிபட்டி நால்ரோடு, பொன்னா லம்மன் சோலை, சாலையூர்,  கொடிங்கியம் , செல்லப்பம்பாளை யம் ,சர்க்கார்புதூர், வல்லகுண்டாபு ரம் பெரியவாளவாடி ஆலாம்பாளை யம் குறிச்சிக்கோட்டை உட்பட பல் வேறு பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு, விவசாய தொழிலா ளர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில்  நடைபெற்ற இந்த விழாக்களில் மார்க்சிஸ்ட் கட்சி உடுலை ஒன்றிய  செயலாளர் கி.கனகராஜ், உடுமலை  கமிட்டி உறுப்பினர்கள் ஏ.பாலதண்ட பாணி, ஏ.ராஜகோபால், எஸ்.ஜெக தீசன் உட்பட 500க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.