சேலம், பிப்.24- வளர்ச்சித்துறையில் திணிக்கப் படும் பணி நெருக்கடிகளை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தி னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக அரசின் வளர்ச்சித்துறை யில் ஊழியர்களுக்கு அதிகப்படி யான வேலைகள் திணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, வளர்ச்சி திட்டங் களை இலக்கு சார்ந்த திட்டமாக செயல்படுவதை கைவிட வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இல வச கழிப்பிடம் கட்டும் திட்டம், நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட பல் வேறு பணிகள் குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கை கோரி திட்டப் பணிகளை சீரழிக்கக்கூடாது. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு போது மான ஊழியர் கட்டமைப்பினை உடன டியாக ஏற்படுத்த வேண்டும். காலம் கடந்து இரவு 10 மணி வரை நடை பெறும் ஆய்வுகளை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் பி.ஜே.கண் ணன் தலைமை வகித்தார். இதில், மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.திருவேரங்கன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், முருகப்பெருமாள், பொரு ளாளர் செல்வம், வளர்ச்சித்தறை சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வடி வேல், மாவட்ட செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், வளர்சித்துறை ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நிர்வாகி அன்பழ கன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.