districts

img

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கிடுக

கோவை, டிச.24- தென் மாவட்டங்களுக்கு செல் லும் ரயில்களை, கோவை - பொள் ளாச்சி வழித்தடத்தில் இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை - பொள்ளாச்சி இடை யிலான முன்பதிவு இல்லாத பய ணிகள் ரயில் சேவை துவக்க விழா  கோவை ரயில் நிலையத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும்  ரயில்வே அதிகாரிகள் கொடி யசைத்து ரயில் சேவையை துவக்கி  வைத்தனர். இதைத்தொடர்ந்து விழா மேடையில் பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., பேசுகையில், கோவை -  பொள்ளாச்சி இடையே ரயில் மீண்டும் இயக்க வேண்டும் என்பது  கோவை மாவட்ட மக்களின் நீண்ட  நாள் கோரிக்கையாக இருந்தது. கோவை - பொள்ளாச்சி இடை யிலான ரயில் பாதை மின்மயமாக் கப்பட்ட பின்னர் தென்காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் களை இந்த வழித்தடத்தில் இயக்க  வேண்டும். சேலம் கோட்டத்தில் செம்மொழி எக்ஸ்பிரஸ் கேரேஜ் களை பயன்படுத்தி, கோவையி லிருந்து பொள்ளாச்சிக்கு பயணி கள் ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  பொள்ளாச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை மெமோ  ரயில் சேவை இயக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனை மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கையாக வைத்து வருகிறார்கள். பொள் ளாச்சியில் இருந்து மேட்டுப்பா ளையத்துக்கு மெமோ ரயில் சேவையை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். மங்களூர் – கோவை இடையிலான ரயில் சேவை மேட் டுப்பாளையம் வரை நீட்டிக்கப்ப டும் என பியூஸ் கோயல் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வே பட்ஜெட்டில் அறிவித் திருந்தார். அது இன்று வரை அமலா காமல் உள்ளது. கொரோனா கால கட்டத்தில் பயணிகள் ரயில்கள்  விரைவு ரயில்களாக மாற்றப்பட் டுள்ளன. இதன் காரணமாக 10  ரூபாய் இருந்த கட்டணம், 30 ரூபா யாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், விரைவு  ரயில்கள் அனைத்து ரயில் நிலை யங்களிலும் நின்று செல்வதில்லை. கோவையில் இருந்து திருப்பூ ருக்கும், திருப்பூரில் இருந்து கோவைக்கும் பணி நிமித்தமாக தினமும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். எனவே, முக்கிய ரயில் நிலையங்களில் விரைவு ரயில்களை நிறுத்துவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும், என் றார். இந்நிகழ்வில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, உதவி மேலாளர் சிவலிங் கம் உள்ளிட்ட ரயில்வே துறை அதி காரிகள் பலர் கலந்து கொண்ட னர்.